கோவை விமான நிலையத்தில் பயணிகளை வரவேற்கும் ஆசிய யானைகள்

கோவை : கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை கவரும் வகையில் விமான நிலைய நிர்வாகம் ஆசிய யானைகளின் மாதிரிகளை நிறுவ முடிவு செய்துள்ளது.

கோவை : கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை கவரும் வகையில் விமான நிலைய நிர்வாகம் ஆசிய யானைகளின் மாதிரிகளை நிறுவ முடிவு செய்துள்ளது. 

நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் கோவை விமான நிலையமும் ஒன்று. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இந்த கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில் ஏராளமான பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, விமானப் பயணிகளை கவரும் வகையில் யானை, மான், காங்கேயம் காளைகள் மற்றும் பல்வேறு விலங்குகளின் மாதிரிகளை விமான நிலைய வளாகத்தில் கண்காட்சிக்கு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, விமான நிலைய நிர்வாகத்தின் சார்பில் ரூ. 58 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

முதற்கட்டமாக, ஆண், பெண் மற்றும் இரு குட்டிகள் அடங்கிய யானை குடும்பத்தின் மாதிரிகள் கோவை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்னும், அதனை நிறுவுவதற்கான இடம் தேர்வு செய்யப்படவில்லை.

இது தொடர்பாக விமான நிலைய முனைய மேலாளர் ஆர். மகாலிங்கம் சிம்ப்ளிசிட்டியிடம் கூறியதாவது:- இந்த விலங்குகளின் மாதிரிகள் தமிழகம் மற்றும் கோவையின் இயற்கை அழகை வெளிப்படுத்தும் விதமாக இருக்கிறது. காங்கேயம் காளைகள் மற்றும் தஞ்சாவூர் பொம்மைகள் நமது கலாச்சாரத்தின் அடையாளமாக உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையின் அழகைக் காண வரும் பயணிகளை கவரும் வகையில் இவைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...