கோவை : கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை கவரும் வகையில் விமான நிலைய நிர்வாகம் ஆசிய யானைகளின் மாதிரிகளை நிறுவ முடிவு செய்துள்ளது.
கோவை : கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை கவரும் வகையில் விமான நிலைய நிர்வாகம் ஆசிய யானைகளின் மாதிரிகளை நிறுவ முடிவு செய்துள்ளது.
நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் கோவை விமான நிலையமும் ஒன்று. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இந்த கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில் ஏராளமான பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, விமானப் பயணிகளை கவரும் வகையில் யானை, மான், காங்கேயம் காளைகள் மற்றும் பல்வேறு விலங்குகளின் மாதிரிகளை விமான நிலைய வளாகத்தில் கண்காட்சிக்கு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, விமான நிலைய நிர்வாகத்தின் சார்பில் ரூ. 58 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, ஆண், பெண் மற்றும் இரு குட்டிகள் அடங்கிய யானை குடும்பத்தின் மாதிரிகள் கோவை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்னும், அதனை நிறுவுவதற்கான இடம் தேர்வு செய்யப்படவில்லை.
இது தொடர்பாக விமான நிலைய முனைய மேலாளர் ஆர். மகாலிங்கம் சிம்ப்ளிசிட்டியிடம் கூறியதாவது:- இந்த விலங்குகளின் மாதிரிகள் தமிழகம் மற்றும் கோவையின் இயற்கை அழகை வெளிப்படுத்தும் விதமாக இருக்கிறது. காங்கேயம் காளைகள் மற்றும் தஞ்சாவூர் பொம்மைகள் நமது கலாச்சாரத்தின் அடையாளமாக உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையின் அழகைக் காண வரும் பயணிகளை கவரும் வகையில் இவைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார்.
நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் கோவை விமான நிலையமும் ஒன்று. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இந்த கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில் ஏராளமான பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, விமானப் பயணிகளை கவரும் வகையில் யானை, மான், காங்கேயம் காளைகள் மற்றும் பல்வேறு விலங்குகளின் மாதிரிகளை விமான நிலைய வளாகத்தில் கண்காட்சிக்கு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, விமான நிலைய நிர்வாகத்தின் சார்பில் ரூ. 58 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, ஆண், பெண் மற்றும் இரு குட்டிகள் அடங்கிய யானை குடும்பத்தின் மாதிரிகள் கோவை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்னும், அதனை நிறுவுவதற்கான இடம் தேர்வு செய்யப்படவில்லை.
இது தொடர்பாக விமான நிலைய முனைய மேலாளர் ஆர். மகாலிங்கம் சிம்ப்ளிசிட்டியிடம் கூறியதாவது:- இந்த விலங்குகளின் மாதிரிகள் தமிழகம் மற்றும் கோவையின் இயற்கை அழகை வெளிப்படுத்தும் விதமாக இருக்கிறது. காங்கேயம் காளைகள் மற்றும் தஞ்சாவூர் பொம்மைகள் நமது கலாச்சாரத்தின் அடையாளமாக உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையின் அழகைக் காண வரும் பயணிகளை கவரும் வகையில் இவைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார்.