தனியார் நூற்பாலையில் தீவிபத்து : பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் நாசம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தனியார் நூற்பாலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தனியார் நூற்பாலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன.

பல்லடத்தை அடுத்த வெட்டுப்பட்டான் குட்டை பகுதியில் செந்தில்குமார் (58) என்பவருக்கு சொந்தமான அதிநவீன நூற்பாலை இயங்கி வருகிறது. இதில், வடமாநில மற்றும் தென்மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்று தொழிலாளர்கள் பலரும் பணியில் இருந்த போது, ஆலையில் உள்ள இயந்திரத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதனால், தொழிலாளர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறினர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பல்லடம் தீயணைப்புத் துறையினர் தனியார் தண்ணீர் லாரிகள் மூலம் நீரைப் பீய்ச்சிடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான அதிநவீன இயந்திரங்கள் மற்றும் கட்டிடமும் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்திற்கு மின்கசிவு காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...