திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தனியார் நூற்பாலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தனியார் நூற்பாலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன.
பல்லடத்தை அடுத்த வெட்டுப்பட்டான் குட்டை பகுதியில் செந்தில்குமார் (58) என்பவருக்கு சொந்தமான அதிநவீன நூற்பாலை இயங்கி வருகிறது. இதில், வடமாநில மற்றும் தென்மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்று தொழிலாளர்கள் பலரும் பணியில் இருந்த போது, ஆலையில் உள்ள இயந்திரத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதனால், தொழிலாளர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறினர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பல்லடம் தீயணைப்புத் துறையினர் தனியார் தண்ணீர் லாரிகள் மூலம் நீரைப் பீய்ச்சிடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான அதிநவீன இயந்திரங்கள் மற்றும் கட்டிடமும் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்திற்கு மின்கசிவு காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்லடத்தை அடுத்த வெட்டுப்பட்டான் குட்டை பகுதியில் செந்தில்குமார் (58) என்பவருக்கு சொந்தமான அதிநவீன நூற்பாலை இயங்கி வருகிறது. இதில், வடமாநில மற்றும் தென்மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்று தொழிலாளர்கள் பலரும் பணியில் இருந்த போது, ஆலையில் உள்ள இயந்திரத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதனால், தொழிலாளர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறினர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பல்லடம் தீயணைப்புத் துறையினர் தனியார் தண்ணீர் லாரிகள் மூலம் நீரைப் பீய்ச்சிடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான அதிநவீன இயந்திரங்கள் மற்றும் கட்டிடமும் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்திற்கு மின்கசிவு காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.