விருதுநகா் மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் பலி உயிரிழந்தனர்.
விருதுநகா் மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் பலி உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. வெயில் காலம் என்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இன்று காலையில் சங்கரலிங்கபுரத்தை அடுத்த ஓ. கோவில்பட்டியில் தனியார் ஆலைக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில், ஒரு அறை தரைமட்டமானது. அந்த அறையில் மருந்து கலக்கி கொண்டிருந்த தொழிலாளர்கள் முருகன், சந்திரன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வெடி விபத்தில் 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதமாயின. இச்சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி போலீஸார் விசாரணை செய்து பட்டாசு ஆலையின் போர்மேன் மற்றும் உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. வெயில் காலம் என்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இன்று காலையில் சங்கரலிங்கபுரத்தை அடுத்த ஓ. கோவில்பட்டியில் தனியார் ஆலைக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில், ஒரு அறை தரைமட்டமானது. அந்த அறையில் மருந்து கலக்கி கொண்டிருந்த தொழிலாளர்கள் முருகன், சந்திரன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வெடி விபத்தில் 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதமாயின. இச்சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி போலீஸார் விசாரணை செய்து பட்டாசு ஆலையின் போர்மேன் மற்றும் உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.