பராமரிப்பின்றி கிடக்கும் 'சூழல் சுற்றுலா' பகுதி: சீரமைக்கச் சுற்றுலா பயணிகள் கோரிக்கை

நீலகிரி: கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில், நீலகிரியில் பராமரிப்பின்றி கிடக்கும் சூழல் சுற்றுலா பகுதியை முறையாக பராமரித்து, சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி: கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில், நீலகிரியில் பராமரிப்பின்றி கிடக்கும் சூழல் சுற்றுலா பகுதியை முறையாக பராமரித்து, சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மலை மாவட்டமான நீலகிரியில் 'சூழல் சுற்றுலா' என்ற பெயரில் வனப்பகுதிகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் வனத்துறை சார்பில் சுற்றுலாத்தலம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, கேர்ன்ஹில் வனப்பகுதியில் தொங்கு பாலம், வனவிலங்குகளான சிறுத்தை, புலி, மான், கரடி, நாகபாம்பு, மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் வாழும் வரையாடுகள் போன்றவை சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக தத்ரூபமாக பாடம் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கு போதிய விளம்பரம் இல்லாததால் சுற்றுலா பயணிகளின் வருகை கேர்ன்ஹில் வனப்பகுதியில் குறைவாகவே உள்ளது. இதனால், இங்கு வைக்கப்பட்டுள்ள வனவிலங்குகளின் மாதிரி உருவங்கள் முறையாகப் பராமரிக்கப்படாததால் சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கின்றன. மேலும், வனப்பகுதி நடுவே அமைக்கப்பட்டுள்ள தொங்கு பாலம் கம்பிகள் மற்றும் பாதைக்காக அமைக்கப்பட்டுள்ள பலகைகள் முற்றிலும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால், இங்கு வரும் ஒரு சில சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.



இதேபோல, வனத்துறை அதிகாரியின் அலுவலகமும் போதிய பராமரிப்பின்றி சேதமடைந்த நிலையில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



எனவே கோடை சீசனுக்குள் சுற்றுலாப் பயணிகளுக்கு போதிய விளம்பர செய்து இங்கு வைக்கப்பட்டுள்ள வனவிலங்குகளின் உருவங்கள் மற்றும் தொங்கு பாலத்தை உடனடியாக சீரமைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேன்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...