திருப்பத்தூர் ரயில்நிலையம் அருகே மின்கம்பி முறிவால் ரயில்சேவை பாதிப்பு

திருப்பத்தூர் - காகங்கரை இடையிலான ரயில்பாதையில் உள்ள மின்கம்பி முறிவால், ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் - காகங்கரை இடையிலான ரயில்பாதையில் உள்ள மின்கம்பி முறிவால், ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருப்பத்தூர் மற்றும் காகங்கரை இடையே உள்ள ரயில்பாதையில் மின்கம்பி முறிந்து விழுந்துள்ளது. இதனால், சேலம் ஜோலார்பேட்டை பிரிவில் ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மதுரை - சென்னை டுரன்டோ எக்ஸ்பிரஸ் (22206), திருவனந்தபுரம் - சென்னை மெயில் (12624) ஆகிய ரயில்கள் காகங்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. மங்களூரூ - சென்னை எக்ஸ்பிரஸ் (12686) சாமல்பட்டியிலும், எர்ணாகுளம் - சென்னை சிறப்பு ரயில் தோடம்பட்டியிலும், கொச்சுவெளி - பெங்களூரூ எக்ஸ்பிரஸ் மொரப்பூரிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல, திருவனந்தபுரம், ஷாலிமார் எக்ஸ்பிரஸ் (22641) லோகூரிலும், திருவனந்தபுரம் - சென்னை எக்ஸ்பிரஸ் (12696) கருப்புவிலும், எர்ணாகுளம் - ஐதராபாத் சிறப்பு எக்ஸ்பிரஸ் (07118) பொம்மிடியிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அறுந்து விழுந்துள்ள மின்கம்பியை சீரமைக்கும் பணி முடிய சுமார் 2 மணி ஆகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோளாறு காரணமாக ரயில் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...