காவிரி விவகாரம்: அ.தி.மு.க., சார்பில் ஏப்., 2-ல் உண்ணாவிரதப் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என துணை முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என துணை முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளையொட்டி, மதுரை ரிங்ரோடு அம்மா திடலில் 120 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தனர்.

விழாவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது:- காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி ஏப்ரல் 2-ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். இந்த உண்ணாவிரத போராட்டம் இந்தியாவில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழகத்தின் வாழ்வாதாரமான காவிரியில் உரிமையை அ.தி.மு.க., ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து போராட்டம் நடக்கும். அ.தி.மு.க.வின் இந்த அறப்போராட்டத்தில் மக்கள் பங்கேற்று வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...