கோவை மாநகராட்சியால் வைக்கப்பட்ட சீலை அகற்ற முயன்றவர்கள் கைது

கோவை : கோவையில் இடியும் நிலையிலுள்ள தனியார் வணிக வளாகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்த நிலையில் அதனை அகற்ற முயன்றவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவை : கோவையில் இடியும் நிலையிலுள்ள தனியார் வணிக வளாகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்த நிலையில் அதனை அகற்ற முயன்றவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர். 

கோவை அரசு மருத்துவமனையின் பழைய பிணவறையை ஒட்டி தனியார் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் 8 பெரிய கடைகளும், 4 சிறிய கடைகளும் செயல்பட்டு வந்தன. இக்கட்டிடம் சேதமடைந்து இடியும் நிலையில் இருப்பதால் உயிர்ச்சேதம் ஏற்பட்டு விடாமல் இருக்க மாநகராட்சி அதிகாரிகள் கட்டிடத்திலுள்ள எட்டு பெரிய கடைகளுக்கு காலையில் சீல் வைத்தனர். மாநகாரட்சி அதிகாரிகளுக்கு பாதுகாப்பாக மூன்று உதவி ஆணையர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். 

இந்த நிலையில் மாலையில் கடை உரிமையாளர்கள் சிலர் சீலை உடைக்க முயன்றனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களைத் தடுத்த நிறுத்தி, சீலை உடைக்க முயன்ற பத்திற்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர். மேலும் அங்கு தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...