கோவை : கோவையில் இடியும் நிலையிலுள்ள தனியார் வணிக வளாகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்த நிலையில் அதனை அகற்ற முயன்றவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை : கோவையில் இடியும் நிலையிலுள்ள தனியார் வணிக வளாகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்த நிலையில் அதனை அகற்ற முயன்றவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை அரசு மருத்துவமனையின் பழைய பிணவறையை ஒட்டி தனியார் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் 8 பெரிய கடைகளும், 4 சிறிய கடைகளும் செயல்பட்டு வந்தன. இக்கட்டிடம் சேதமடைந்து இடியும் நிலையில் இருப்பதால் உயிர்ச்சேதம் ஏற்பட்டு விடாமல் இருக்க மாநகராட்சி அதிகாரிகள் கட்டிடத்திலுள்ள எட்டு பெரிய கடைகளுக்கு காலையில் சீல் வைத்தனர். மாநகாரட்சி அதிகாரிகளுக்கு பாதுகாப்பாக மூன்று உதவி ஆணையர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் மாலையில் கடை உரிமையாளர்கள் சிலர் சீலை உடைக்க முயன்றனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களைத் தடுத்த நிறுத்தி, சீலை உடைக்க முயன்ற பத்திற்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர். மேலும் அங்கு தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனையின் பழைய பிணவறையை ஒட்டி தனியார் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் 8 பெரிய கடைகளும், 4 சிறிய கடைகளும் செயல்பட்டு வந்தன. இக்கட்டிடம் சேதமடைந்து இடியும் நிலையில் இருப்பதால் உயிர்ச்சேதம் ஏற்பட்டு விடாமல் இருக்க மாநகராட்சி அதிகாரிகள் கட்டிடத்திலுள்ள எட்டு பெரிய கடைகளுக்கு காலையில் சீல் வைத்தனர். மாநகாரட்சி அதிகாரிகளுக்கு பாதுகாப்பாக மூன்று உதவி ஆணையர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் மாலையில் கடை உரிமையாளர்கள் சிலர் சீலை உடைக்க முயன்றனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களைத் தடுத்த நிறுத்தி, சீலை உடைக்க முயன்ற பத்திற்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர். மேலும் அங்கு தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர்.