காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக நாளை மறுநாள் (மார்ச் 31) நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக நாளை மறுநாள் (மார்ச் 31) நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த 6 வார கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. ஆனால், இதுவரை மேலாண்மை வாரியம் அமைக்கப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கவில்லை. கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே 12-ம் தேதி நடைபெற இருக்கிறது. அதைக் கருத்தில்கொண்டே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தயங்குவதாக தமிழக அரசியல் கட்சிகளும், விவசாயிகளும் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனிடையே, மேலாண்மை வாரியம் அமைக்காமல், மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இன்றுடன் காலக்கெடு முடியும் நிலையில், எந்தவிதமான வாரியமோ அமைத்ததற்கான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், உச்சநீதிமன்ற கெடு முடிந்து விட்டதால், அடுத்த கட்டமாக தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அ.தி.மு.க எம்பிக்கள் அருண்மொழி தேவன் , குமார் ஆகியோர் சந்தித்து பேசினர். பின்னர், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மதுரை செல்வதால் அவரை தவிர்த்து மற்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மீண்டும் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்து அழுத்தம் தர தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அனைத்துக்கட்சி கட்சி கூட்டத்தைக் கூட்டி ஒருமித்த கருத்தை எட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக நாளை மறுநாள் (மார்ச் 31) நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த 6 வார கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. ஆனால், இதுவரை மேலாண்மை வாரியம் அமைக்கப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கவில்லை. கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே 12-ம் தேதி நடைபெற இருக்கிறது. அதைக் கருத்தில்கொண்டே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தயங்குவதாக தமிழக அரசியல் கட்சிகளும், விவசாயிகளும் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனிடையே, மேலாண்மை வாரியம் அமைக்காமல், மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இன்றுடன் காலக்கெடு முடியும் நிலையில், எந்தவிதமான வாரியமோ அமைத்ததற்கான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், உச்சநீதிமன்ற கெடு முடிந்து விட்டதால், அடுத்த கட்டமாக தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அ.தி.மு.க எம்பிக்கள் அருண்மொழி தேவன் , குமார் ஆகியோர் சந்தித்து பேசினர். பின்னர், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மதுரை செல்வதால் அவரை தவிர்த்து மற்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மீண்டும் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்து அழுத்தம் தர தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அனைத்துக்கட்சி கட்சி கூட்டத்தைக் கூட்டி ஒருமித்த கருத்தை எட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக நாளை மறுநாள் (மார்ச் 31) நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.