கோவை : கோவையில் மார்ட்டின் அறக்கட்டளையின் சார்பில் கட்டப்பட்ட ரூ. 20 லட்சம் மதிப்பிலான கழிப்பறைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
கோவை : கோவையில் மார்ட்டின் அறக்கட்டளையின் சார்பில் கட்டப்பட்ட ரூ. 20 லட்சம் மதிப்பிலான கழிப்பறைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி பல்வேறு அமைப்புகள் மற்றும் அறக்கட்டளைகளின் உதவியுடன் செய்து வருகிறது. இதன் ஒருபகுதியாக திறந்தவெளி மலம் கழித்தல் இல்லா பகுதியாக துடியலூர் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதிகளை மாற்றும் நடவடிக்கையாக மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் இலவச கழிப்பறைகள் கட்டப்பட்டன. கோவை மாநகராட்சி மற்றும் ரோட்டரி கிளப்பின் உதவியுடன் சுமார் ரூ. 20 லட்சம் செலவில் இந்தக் கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டன.

இந்த நிலையில், இந்த இலவச கழிப்பறைகளை 165 பயனாளிகளுக்கு மார்ட்டின் அறக்கட்டளையின் அறங்காவலர் லீமா ரோஸ் மார்ட்டின் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், "ஏழை, எளியவர்களுக்கு இலவச கழிப்பறைகளை கொடுக்க வேண்டும் என்பது தனது கணவரின் நீண்ட நாள் கனவு. இதற்காக, அவர் ரூ. 5 லட்சம் தருவதாக கூறினார். ஆனால், தற்போது, ரூ. 20 லட்சம் செலவில் இந்தக் கழிப்பறைகளை கட்ட நிதியளித்துள்ளார். சமுதாயத்தில் நலிவடைந்தவர்கள் மற்றும் ஏழை, எளியவர்களுக்கு உதவுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளார்," என்றார்.
பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி பல்வேறு அமைப்புகள் மற்றும் அறக்கட்டளைகளின் உதவியுடன் செய்து வருகிறது. இதன் ஒருபகுதியாக திறந்தவெளி மலம் கழித்தல் இல்லா பகுதியாக துடியலூர் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதிகளை மாற்றும் நடவடிக்கையாக மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் இலவச கழிப்பறைகள் கட்டப்பட்டன. கோவை மாநகராட்சி மற்றும் ரோட்டரி கிளப்பின் உதவியுடன் சுமார் ரூ. 20 லட்சம் செலவில் இந்தக் கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டன.

இந்த நிலையில், இந்த இலவச கழிப்பறைகளை 165 பயனாளிகளுக்கு மார்ட்டின் அறக்கட்டளையின் அறங்காவலர் லீமா ரோஸ் மார்ட்டின் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், "ஏழை, எளியவர்களுக்கு இலவச கழிப்பறைகளை கொடுக்க வேண்டும் என்பது தனது கணவரின் நீண்ட நாள் கனவு. இதற்காக, அவர் ரூ. 5 லட்சம் தருவதாக கூறினார். ஆனால், தற்போது, ரூ. 20 லட்சம் செலவில் இந்தக் கழிப்பறைகளை கட்ட நிதியளித்துள்ளார். சமுதாயத்தில் நலிவடைந்தவர்கள் மற்றும் ஏழை, எளியவர்களுக்கு உதவுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளார்," என்றார்.