ரூ. 20 லட்சம் மதிப்பிலான இலவச கழிப்பறைகளை பயனாளிகளுக்கு வழங்கிய மார்ட்டின் அறக்கட்டளை

கோவை : கோவையில் மார்ட்டின் அறக்கட்டளையின் சார்பில் கட்டப்பட்ட ரூ. 20 லட்சம் மதிப்பிலான கழிப்பறைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

கோவை : கோவையில் மார்ட்டின் அறக்கட்டளையின் சார்பில் கட்டப்பட்ட ரூ. 20 லட்சம் மதிப்பிலான கழிப்பறைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. 

பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி பல்வேறு அமைப்புகள் மற்றும் அறக்கட்டளைகளின் உதவியுடன் செய்து வருகிறது. இதன் ஒருபகுதியாக திறந்தவெளி மலம் கழித்தல் இல்லா பகுதியாக துடியலூர் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதிகளை மாற்றும் நடவடிக்கையாக மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் இலவச கழிப்பறைகள் கட்டப்பட்டன. கோவை மாநகராட்சி மற்றும் ரோட்டரி கிளப்பின் உதவியுடன் சுமார் ரூ. 20 லட்சம் செலவில் இந்தக் கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டன.



இந்த நிலையில், இந்த இலவச கழிப்பறைகளை 165 பயனாளிகளுக்கு மார்ட்டின் அறக்கட்டளையின் அறங்காவலர் லீமா ரோஸ் மார்ட்டின் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், "ஏழை, எளியவர்களுக்கு இலவச கழிப்பறைகளை கொடுக்க வேண்டும் என்பது தனது கணவரின் நீண்ட நாள் கனவு. இதற்காக, அவர் ரூ. 5 லட்சம் தருவதாக கூறினார். ஆனால், தற்போது, ரூ. 20 லட்சம் செலவில் இந்தக் கழிப்பறைகளை கட்ட நிதியளித்துள்ளார். சமுதாயத்தில் நலிவடைந்தவர்கள் மற்றும் ஏழை, எளியவர்களுக்கு உதவுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளார்," என்றார். 

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...