திருப்பூர் : திருப்பூரில் விளைநிலத்தில் மின்பாதை அமைப்பதற்காக நிலத்தை அளவீடு செய்ய முயன்ற பவர்கிரிட் அதிகாரிகளை, அப்பகுதிகளை விவசாயிகள் விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் : திருப்பூரில் விளைநிலத்தில் மின்பாதை அமைப்பதற்காக நிலத்தை அளவீடு செய்ய முயன்ற பவர்கிரிட் அதிகாரிகளை, அப்பகுதிகளை விவசாயிகள் விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்லடம் அருகே வாவிபாளையத்தில் சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் விவசாயத்தையே முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். இந்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாய விளைநிலங்களின் வழியே பல்வேறு மின் பாதை, உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கும் பணிகளில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, உயர் மின்பாதை அமைக்க மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வரும் பணிக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வாவிபாளையம் பகுதியில் உடுமலையைச் சேர்ந்த பவர்கிரிட் அதிகாரிகள், மின்கோபுரம் மற்றும் மின் வழித்தடம் அமைப்பதற்கான நிலஅளவீடு செய்யும் பணியை இன்று மேற்கொண்டனர். இதையறிந்த அப்பகுதி விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அதிகாரிகள் வந்த வாகனங்களையும் சிறைபிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. விவசாயிகளின் இந்தப் போராட்டத்தால் அதிகாரிகள் மேற்கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் தங்களது அளவீட்டுப் பணியை நிறுத்தி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, விவசாயிகள் திரண்டு மின்வாரிய அதிகாரிகளை அப்பகுதியை விட்டே விரட்டியடித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், "மத்திய, மாநில அரசுகளின் மின் திட்டங்களால் சிறு, குறு விவசாயிகள் நிலங்களை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. உடனடியாக மத்திய, மாநில அரசுகள் இத்திட்டத்தைக் கைவிட்டு, நெடுஞ்சாலையோரம் இத்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். இல்லையெனில், விவசாய விளைநிலத்தில் மின்திட்ட அதிகாரிகள் நுழைய அனுமதிக்க மாட்டோம். பலகட்டப் போராட்டங்களில் ஈடுபடுவோம்," இவ்வாறு கூறினர்.
பல்லடம் அருகே வாவிபாளையத்தில் சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் விவசாயத்தையே முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். இந்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாய விளைநிலங்களின் வழியே பல்வேறு மின் பாதை, உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கும் பணிகளில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, உயர் மின்பாதை அமைக்க மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வரும் பணிக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வாவிபாளையம் பகுதியில் உடுமலையைச் சேர்ந்த பவர்கிரிட் அதிகாரிகள், மின்கோபுரம் மற்றும் மின் வழித்தடம் அமைப்பதற்கான நிலஅளவீடு செய்யும் பணியை இன்று மேற்கொண்டனர். இதையறிந்த அப்பகுதி விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அதிகாரிகள் வந்த வாகனங்களையும் சிறைபிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. விவசாயிகளின் இந்தப் போராட்டத்தால் அதிகாரிகள் மேற்கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் தங்களது அளவீட்டுப் பணியை நிறுத்தி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, விவசாயிகள் திரண்டு மின்வாரிய அதிகாரிகளை அப்பகுதியை விட்டே விரட்டியடித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், "மத்திய, மாநில அரசுகளின் மின் திட்டங்களால் சிறு, குறு விவசாயிகள் நிலங்களை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. உடனடியாக மத்திய, மாநில அரசுகள் இத்திட்டத்தைக் கைவிட்டு, நெடுஞ்சாலையோரம் இத்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். இல்லையெனில், விவசாய விளைநிலத்தில் மின்திட்ட அதிகாரிகள் நுழைய அனுமதிக்க மாட்டோம். பலகட்டப் போராட்டங்களில் ஈடுபடுவோம்," இவ்வாறு கூறினர்.