திருப்பூர் : திருப்பூரில் மகாவீர் ஜெயந்தியன்று, தடையை மீறி விற்பனை செய்யப்பட்ட இறைச்சியை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
திருப்பூர் : திருப்பூரில் மகாவீர் ஜெயந்தியன்று, தடையை மீறி விற்பனை செய்யப்பட்ட இறைச்சியை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, இறைச்சி கடைகள் மற்றும் மதுபான கடைகள் இயங்கக் கூடாது என்பது அரசு விதி. விதியை மீறி செயல்பட்ட கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில், இன்று திருப்பூர் ஊத்துக்குளி சாலை, கருமாரம்பாளையம் பகுதியில் செயல்பட்ட இறைச்சி கடைகளின் பொருட்களை திருப்பூர் மாநகராட்சி சுகாதார துறையினர் பறிமுதல் செய்தனர்.
பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகளை ஏற்றிக் கொண்டு மாநகராட்சி வாகனத்தை ஒட்டுநர் ரமேஷ் ஒட்டி வந்தார். திருப்பூர் முத்தணம்பாளையம் பகுதியில் அருகே வந்த போது, இறைச்சி கடையைச் சேர்ந்த சித்திக் என்பவர் மாநகராட்சி ஊழியர்களிடம் பொருட்களை எடுத்து வந்ததை கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனைத்தொடர்ந்து, மாநகராட்சி ஊழியர்கள், தங்களைப் பணி செய்யவிடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டதாக சித்திக் மீது திருப்பூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, ஊரக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, இறைச்சி கடைகள் மற்றும் மதுபான கடைகள் இயங்கக் கூடாது என்பது அரசு விதி. விதியை மீறி செயல்பட்ட கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில், இன்று திருப்பூர் ஊத்துக்குளி சாலை, கருமாரம்பாளையம் பகுதியில் செயல்பட்ட இறைச்சி கடைகளின் பொருட்களை திருப்பூர் மாநகராட்சி சுகாதார துறையினர் பறிமுதல் செய்தனர்.
பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகளை ஏற்றிக் கொண்டு மாநகராட்சி வாகனத்தை ஒட்டுநர் ரமேஷ் ஒட்டி வந்தார். திருப்பூர் முத்தணம்பாளையம் பகுதியில் அருகே வந்த போது, இறைச்சி கடையைச் சேர்ந்த சித்திக் என்பவர் மாநகராட்சி ஊழியர்களிடம் பொருட்களை எடுத்து வந்ததை கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனைத்தொடர்ந்து, மாநகராட்சி ஊழியர்கள், தங்களைப் பணி செய்யவிடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டதாக சித்திக் மீது திருப்பூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, ஊரக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.