வேலூர் மாவட்டம், குடியாத்தம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மகள் இந்திரா இன்று வீட்டின் பின் பக்கம் தண்ணீர் பிடிக்கச் சென்றார்.
வேலூர் : வேலூர் மாவட்டம், குடியாத்தம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மகள் இந்திரா இன்று வீட்டின் பின் பக்கம் தண்ணீர் பிடிக்கச் சென்றார். அப்போது, அந்தப் பகுதியில் ஏதோ வெள்ளையாகத் தெரிந்ததால் அருகில் சென்று பார்த்திருக்கிறார். அப்போது தான் அது பாம்பு முட்டைகள் என்று தெரியவந்தது.
மேலும், அதன் அருகிலேயே 70-க்கும் மேற்பட்ட பாம்புக் குட்டிகள் குவியலாக நெளிந்து கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக, தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் கஜேந்திரனின் வீட்டிற்குச் சென்று பாம்புக் குட்டிகளையும், முட்டைகளையும் கைப்பற்றினர். பின்னர், அந்த பாம்புக் குட்டிகளையும், முட்டைகளையும் வனத் துறையிடம் ஒப்படைத்தனர்.
வீட்டில் குவியலாக இருந்த பாம்புகளை பார்த்த குடியாத்தம் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயினர்.
மேலும், அதன் அருகிலேயே 70-க்கும் மேற்பட்ட பாம்புக் குட்டிகள் குவியலாக நெளிந்து கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக, தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் கஜேந்திரனின் வீட்டிற்குச் சென்று பாம்புக் குட்டிகளையும், முட்டைகளையும் கைப்பற்றினர். பின்னர், அந்த பாம்புக் குட்டிகளையும், முட்டைகளையும் வனத் துறையிடம் ஒப்படைத்தனர்.
வீட்டில் குவியலாக இருந்த பாம்புகளை பார்த்த குடியாத்தம் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயினர்.