டாஸ்மாக்கில் அரசியல் தலையீட்டை நிறுத்த வலியுறுத்தி மாநாடு

டாஸ்மாக் நிறுவனத்தில் கோடிக்கணக்கான ரூபாய் அரசிற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் அரசியல் தலையீட்டை தடுத்து நிறுத்த வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் கோவையில் மாநாடு நடத்தினர்.

கோவை : டாஸ்மாக் நிறுவனத்தில் கோடிக்கணக்கான ரூபாய் அரசிற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் அரசியல் தலையீட்டை தடுத்து நிறுத்த வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் கோவையில் மாநாடு நடத்தினர். 



சி.ஐ.டி.யு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் 6-வது மாவட்ட மாநாடு இன்று கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது, 

இதில், டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிலை ஆணை சட்டம் இல்லாத காரணத்தால் ஊழியர்களின் பணிமாறுதல், கடை ஆய்வு, சரக்கு கொள்முதல், உரிமம் இன்றி மதுக்கூடம் நடத்த அனுமதி என்று அதிகாரிகள் தங்களின் இஷ்டம் போல செயல்படுகின்றனர். இதனால் டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது. அரசுக்கும் பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனைத் தடுக்க உடனடியாக நிலை ஆணை உருவாக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், அரசியல் தலையீட்டின் காரணமாக மதுக்கூடங்கள் முறைகேடாக செயல்படுவதால் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதனைத் தடுக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...