டாஸ்மாக் நிறுவனத்தில் கோடிக்கணக்கான ரூபாய் அரசிற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் அரசியல் தலையீட்டை தடுத்து நிறுத்த வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் கோவையில் மாநாடு நடத்தினர்.
கோவை : டாஸ்மாக் நிறுவனத்தில் கோடிக்கணக்கான ரூபாய் அரசிற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் அரசியல் தலையீட்டை தடுத்து நிறுத்த வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் கோவையில் மாநாடு நடத்தினர்.

சி.ஐ.டி.யு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் 6-வது மாவட்ட மாநாடு இன்று கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,
இதில், டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிலை ஆணை சட்டம் இல்லாத காரணத்தால் ஊழியர்களின் பணிமாறுதல், கடை ஆய்வு, சரக்கு கொள்முதல், உரிமம் இன்றி மதுக்கூடம் நடத்த அனுமதி என்று அதிகாரிகள் தங்களின் இஷ்டம் போல செயல்படுகின்றனர். இதனால் டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது. அரசுக்கும் பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனைத் தடுக்க உடனடியாக நிலை ஆணை உருவாக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், அரசியல் தலையீட்டின் காரணமாக மதுக்கூடங்கள் முறைகேடாக செயல்படுவதால் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதனைத் தடுக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

சி.ஐ.டி.யு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் 6-வது மாவட்ட மாநாடு இன்று கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,
இதில், டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிலை ஆணை சட்டம் இல்லாத காரணத்தால் ஊழியர்களின் பணிமாறுதல், கடை ஆய்வு, சரக்கு கொள்முதல், உரிமம் இன்றி மதுக்கூடம் நடத்த அனுமதி என்று அதிகாரிகள் தங்களின் இஷ்டம் போல செயல்படுகின்றனர். இதனால் டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது. அரசுக்கும் பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனைத் தடுக்க உடனடியாக நிலை ஆணை உருவாக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், அரசியல் தலையீட்டின் காரணமாக மதுக்கூடங்கள் முறைகேடாக செயல்படுவதால் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதனைத் தடுக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.