பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிட விவசாயிகள் முடிவு: போலீசார் குவிப்பு

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ள நிலையில், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ள நிலையில், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காவிரி விவகாரத்தில் தீர்வு காண குழுவை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் விடுத்த கெடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. ஆனால், இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக அரசு ஒருபுறம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், விவசாய சங்கங்கள் மற்றும் அமைப்புகள் மறுபுறம் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்றம் விடுத்த காலக்கெடுவிற்குள், அதாவது இன்று 3 மணிக்குள் அமைக்காவிட்டால் பிரதமர் மோடியின் வீட்டை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் சங்கங்களின் தலைவர் அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தை சுற்றியும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தடையை மீறி போராட்டம் நடத்தும் விவசாயிகளை கைது செய்யவும் தயார் நிலையில் உள்ளனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...