காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ள நிலையில், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ள நிலையில், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
காவிரி விவகாரத்தில் தீர்வு காண குழுவை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் விடுத்த கெடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. ஆனால், இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக அரசு ஒருபுறம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், விவசாய சங்கங்கள் மற்றும் அமைப்புகள் மறுபுறம் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்றம் விடுத்த காலக்கெடுவிற்குள், அதாவது இன்று 3 மணிக்குள் அமைக்காவிட்டால் பிரதமர் மோடியின் வீட்டை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் சங்கங்களின் தலைவர் அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தை சுற்றியும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தடையை மீறி போராட்டம் நடத்தும் விவசாயிகளை கைது செய்யவும் தயார் நிலையில் உள்ளனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
காவிரி விவகாரத்தில் தீர்வு காண குழுவை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் விடுத்த கெடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. ஆனால், இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக அரசு ஒருபுறம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், விவசாய சங்கங்கள் மற்றும் அமைப்புகள் மறுபுறம் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்றம் விடுத்த காலக்கெடுவிற்குள், அதாவது இன்று 3 மணிக்குள் அமைக்காவிட்டால் பிரதமர் மோடியின் வீட்டை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் சங்கங்களின் தலைவர் அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தை சுற்றியும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தடையை மீறி போராட்டம் நடத்தும் விவசாயிகளை கைது செய்யவும் தயார் நிலையில் உள்ளனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.