நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ஜெயின் சமூகத்தினரின் சார்பில் மகாவீர் ஜெயந்தி விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ஜெயின் சமூகத்தினரின் சார்பில் மகாவீர் ஜெயந்தி விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
மகாவீரரின் பிறந்த நாளான மார்ச் 29-ம் தேதி மகாவீர் ஜெயந்தியாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் வசிக்கும் ஜெயின் சமூகத்தினரும் இதனைக் கொண்டாடி வருகின்றனர். பல கடின உண்ணா நோன்புகள், மெளன விரதங்கள், ஏழைகளுக்கு உதவுதல் மற்றும் தானதர்மங்கள் செய்தும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று நடைபெற்ற மகாவீர் ஜெயந்தி ஊர்வலமானது, நகரின் முக்கிய வீதிகளான மெயின் பஜார், லோயர் பஜார், ஐந்து லாந்தர், காபி ஹவுஸ் சந்திப்பு வழியாக சென்று ஜெயின் கோவிலை அடைந்தது. ஊர்வலத்தில் பெரியோர், சிறியவர்கள் என அனைவரும் பக்தி பாடல்களைப் பாடி மகிழ்ந்தனர்.

மகாவீரரின் பிறந்த நாளான மார்ச் 29-ம் தேதி மகாவீர் ஜெயந்தியாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் வசிக்கும் ஜெயின் சமூகத்தினரும் இதனைக் கொண்டாடி வருகின்றனர். பல கடின உண்ணா நோன்புகள், மெளன விரதங்கள், ஏழைகளுக்கு உதவுதல் மற்றும் தானதர்மங்கள் செய்தும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று நடைபெற்ற மகாவீர் ஜெயந்தி ஊர்வலமானது, நகரின் முக்கிய வீதிகளான மெயின் பஜார், லோயர் பஜார், ஐந்து லாந்தர், காபி ஹவுஸ் சந்திப்பு வழியாக சென்று ஜெயின் கோவிலை அடைந்தது. ஊர்வலத்தில் பெரியோர், சிறியவர்கள் என அனைவரும் பக்தி பாடல்களைப் பாடி மகிழ்ந்தனர்.
