குடிநீர் வீணாவதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்: போக்குவரத்து பாதிப்பு

திருப்பூர்: திருப்பூரில் குடிநீர் வீணாவதை கண்டித்து பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பூர்: திருப்பூரில் குடிநீர் வீணாவதை கண்டித்து பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அம்மாபாளையம் பகுதியில் உள்ள குடிநீர் குழாய் ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. இதில், வெளியேறும் தண்ணீர் சாக்கடையில் வீணாக கலந்து வந்தது. மேலும், அதனால் ஏற்பட்ட பள்ளத்தில் வாகனங்களில் வருபவர்கள் கீழே விழும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

இந்த நிலையில், குடிநீர் வீணாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத நிர்வாகத்தைக் கண்டித்து திருப்பூர் - அவிநாசி நெடுஞ்சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், குழாய் உடைப்பை உடனடியாக சீர்செய்யக் கோரி மறியல் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனையடுத்து, மற்ற துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாததால் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் கூறினார்.



மேலும், இன்று குழாய் உடைப்பை சரிசெய்யாவிடில் நாளை மறியல் செய்ய தாங்களே ஒத்துழைப்பு தருவதாக போலீசாரும் தெரிவித்தனர். இதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனையடுத்து, பொதுமக்கள் மறியலைக் கைவிட்டுவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக திருப்பூர் - அவிநாசி நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...