இடியும் நிலையில் உள்ள கட்டிடத்திற்கு சீல் வைத்த கோவை மாநகராட்சி

கோவை: கோவையில் இடியும் நிலையிலுள்ள தனியார் வணிக வளாகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.


கோவை: கோவையில் இடியும் நிலையிலுள்ள தனியார் வணிக வளாகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அரசு மருத்துவமனையை ஒட்டி தனியார் வணிக வளாகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தில் 8 பெரிய கடைகளும், 4 சிறிய கடைகளும் செயல்பட்டு வந்தன.

இந்நிலையில், அந்த வணிக வளாக கட்டிடம் பாதுகாப்பற்ற நிலையில் செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது. தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் அந்த கட்டிடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், வணிக வளாக கட்டிட உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பினர்.



ஆறு மாதங்கள் கடந்தும் வணிக வளாகத்தில் உள்ள கடைகள் அகற்றப்படாமல் பாதுகாப்பற்ற சூழலில் கடைகள் இயங்கி வந்தது. மேலும், கட்டிடம் சேதமடைந்து இடியும் நிலையில் இருந்தது. இதனால், உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி மாநகராட்சி ஆணையரின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் கட்டிடத்திலுள்ள எட்டு பெரிய கடைகளுக்கு இன்று சீல் வைத்தனர்.

இந்த கட்டிடத்தின் உரிமையாளருக்கும், அங்கு கடை வைத்துள்ளவர்களுக்கும் இடையேயான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், இன்று அந்த வணிக வளாகத்தை சீல் வைக்க வந்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு பாதுகாப்பாக மூன்று உதவி ஆணையர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...