நீலகிரி: தொடர் விடுமுறை காரணமாக இன்று முதல் வரும் ஏப்ரல் 1-ம் தேதி வரை குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை ஒரு வழிப் பாதையாக மாற்றப்படுகிறது.
நீலகிரி: தொடர் விடுமுறை காரணமாக இன்று முதல் வரும் ஏப்ரல் 1-ம் தேதி வரை குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை ஒரு வழிப் பாதையாக மாற்றப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் உதகையில் கோடை சீசன் தொடங்கியுள்ளது. அம்மாவட்டத்திற்கு நாள்தோறும் சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இன்று முதல் நான்கு நாட்களுக்கு தொடர் விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையை ஒரு வழிப் பாதையாக மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வரும் அனைத்து வாகனங்கள் குன்னூர் வழியாகவும், உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாகவும் செல்ல வேண்டும்.
இதைத் தவிர லாரி போன்ற வாகனங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இரண்டு பாதையிலும் அனுமதிக்கப்படாது.
இந்த போக்குவரத்து மாற்றம் இன்று முதல் வரும் ஏப்ரல் மாதம் 1-ம் தேதி வரை அமலில் இருக்கும்" என்றார்.