நீலகிரி : நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 48 நாட்களாக நடைபெற்று வந்த யானைகள் புத்துணர்வு முகாம் இன்றுடன் நிறைவு பெற்றது.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 48 நாட்களாக நடைபெற்று வந்த யானைகள் புத்துணர்வு முகாம் இன்றுடன் நிறைவு பெற்றது.

முதுமலை புலிகள் காப்பகத்தில் வைத்துப் பராமரிக்கப்படும் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் கடந்த மாதம் 9ம் தேதி துவங்கியது. அன்று முதல் முகாமில் உள்ள 23 யானைகளுக்கு இக்காலகட்டத்தில் சிறப்பு சிகிச்சைகள், சத்துள்ள உணவுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வந்தன.
இந்நாட்களில் யானைகளை வேறு பணிகளுக்கு ஈடுபடுத்தாமலும், சவாரிக்கு பயன்படுத்தாமலும் வைத்திருந்தனர். இன்றுடன் 48 நாட்கள் முகாம் நிறைவு பெற்ற நிலையில், யானைகளுக்கு பிள்ளையார் கோவிலில் பூஜை நடைபெற்றது. பின்னர் சுவையான பழங்கள், கரும்பு ஆகியவற்றுடன் உணவு வழங்கப்பட்டு முகாம் நிறைவு பெற்றது. இந்நிலையில், நாளை முதல் வழக்கம்போல, சுற்றுலாப் பயணிகளுக்காக யானைச் சவாரி தொடங்கப்படவுள்ளது.