உலகளவில் பிரபலமாகியுள்ள 'சுடோகு‘ விளையாட்டை தென்னிந்திய மக்கள் 300 ஆண்டுகளுக்கு முன்பே விளையாடியிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
உலகளவில் பிரபலமாகியுள்ள 'சுடோகு‘ விளையாட்டை தென்னிந்திய மக்கள் 300 ஆண்டுகளுக்கு முன்பே விளையாடியிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
தென்னிந்திய மக்களின் பாரம்பரிய விளையாட்டுகளாக பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம் மற்றும் பரமபதம் போன்றவை என்பது அனைவரும் அரிந்ததே. ஆனால், 'சுடோகு' என்ற வார்த்தை விளையாட்டு பற்றி உங்களுக்கு தெரியுமா...?
பழனி அருகே பழங்கால மண்டபத்தில் உள்ள கல்தூணில் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர். அப்போது, 'சுடோகு' என்ற வார்த்தை விளையாட்டு விளையாடியிருப்பது பொறிக்கப்பட்டிருந்தது. இந்த மண்டபம் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் விழாவின் போது மட்டுமே பக்தர்களால் பயன்படுத்தப்படுகிறது. "தூணில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் மற்றும் எண்களை வைத்துப் பார்க்கும் போது, இந்த விளையாட்டு 17-ம் நூற்றாண்டில் விளையாடியது போல இருக்கிறது," என தொல்பொருள் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தற்போதைய உலகின் நடைமுறைகளை, தொன்றுதொட்டவர்கள் என்ற பெருமையைப் பெற்ற தமிழர்கள், பண்டைய காலத்திலேயே செய்திருப்பது நம்மை பெருமையடையச் செய்கிறது.
தென்னிந்திய மக்களின் பாரம்பரிய விளையாட்டுகளாக பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம் மற்றும் பரமபதம் போன்றவை என்பது அனைவரும் அரிந்ததே. ஆனால், 'சுடோகு' என்ற வார்த்தை விளையாட்டு பற்றி உங்களுக்கு தெரியுமா...?
பழனி அருகே பழங்கால மண்டபத்தில் உள்ள கல்தூணில் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர். அப்போது, 'சுடோகு' என்ற வார்த்தை விளையாட்டு விளையாடியிருப்பது பொறிக்கப்பட்டிருந்தது. இந்த மண்டபம் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் விழாவின் போது மட்டுமே பக்தர்களால் பயன்படுத்தப்படுகிறது. "தூணில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் மற்றும் எண்களை வைத்துப் பார்க்கும் போது, இந்த விளையாட்டு 17-ம் நூற்றாண்டில் விளையாடியது போல இருக்கிறது," என தொல்பொருள் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தற்போதைய உலகின் நடைமுறைகளை, தொன்றுதொட்டவர்கள் என்ற பெருமையைப் பெற்ற தமிழர்கள், பண்டைய காலத்திலேயே செய்திருப்பது நம்மை பெருமையடையச் செய்கிறது.