ஓட்டுநர் உரிமம், புதுப்பித்தல், விலாச மாற்றத்துக்கு இனி ஒரே படிவம்

போக்குவரத்து துறையில் ஓட்டுநர் உரிமம், உரிமம் புதுப்பித்தல், விலாச மாற்றம் உள்ளிட்ட அனைத்துக்கும் ஒரே படிவத்தில் விண்ணப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறையில் ஓட்டுநர் உரிமம், உரிமம் புதுப்பித்தல், விலாச மாற்றம் உள்ளிட்ட அனைத்துக்கும் ஒரே படிவத்தில் விண்ணப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக போக்குவரத்துத் துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மத்திய மோட்டார் வாகன விதி 1989-ல் பின்வரும் விதித்திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இத்திருத்தத்தில் முகவரி மற்றும் வயதிற்கு சான்றாக ஆதார் அட்டை சமர்ப்பிக்க திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பழகுனர் உரிமம், புதிய ஓட்டுநர் உரிமம், உரிமத்தில் விலாச மாற்றம் மற்றும் உரிமம் புதுப்பித்தல் போன்றவற்றிற்கு வெவ்வேறு படிவங்கள் முன்பு பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது, மேற்கண்ட அனைத்துப் பணிகளையும் படிவம் 2-லேயே பூர்த்தி செய்ய திருத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களின் மேற்கண்ட தேவைகளை ஒரே படிவத்தில் பூர்த்தி செய்து வரும் ஏப்ரல் 1 முதல் முதல் பயன்பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...