ரூ. 150 லஞ்சம் வாங்கிய மருத்துவமனை பணியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் உடற்தகுதி சான்றிதழ் வழங்க ரூ. 150 லஞ்சமாகப் பெற்ற ஊழியருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் உடற்தகுதி சான்றிதழ் வழங்க ரூ. 150 லஞ்சமாகப் பெற்ற ஊழியருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர், கோவை காந்திபுரம் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2008-ம் ஆண்டு உடற்தகுதி சான்றிதழ் வேண்டி கோவை அரசு மருத்துவமனையில் விண்ணப்பித்துள்ளார். அங்கு, ரெக்கார்ட் கிளர்க்காக பணிபுரிந்து வந்த மணியன் என்பவர், சான்றிதழ் அளிக்க ரூ. 150 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க மனமில்லாத ரமேஷ், இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். 

பின்னர், லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய நோட்டுகளை பெற்றுக் கொண்ட ரமேஷ், அதனை மணியனிடம் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு பதுங்கிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், மணியனை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக மணியனுக்கு இரண்டாண்டு சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதம் விதித்து நீதிபதி ஜான் மினோ தீர்ப்பளித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...