கோவை : கோவை அரசு மருத்துவமனையில் உடற்தகுதி சான்றிதழ் வழங்க ரூ. 150 லஞ்சமாகப் பெற்ற ஊழியருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோவை : கோவை அரசு மருத்துவமனையில் உடற்தகுதி சான்றிதழ் வழங்க ரூ. 150 லஞ்சமாகப் பெற்ற ஊழியருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர், கோவை காந்திபுரம் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2008-ம் ஆண்டு உடற்தகுதி சான்றிதழ் வேண்டி கோவை அரசு மருத்துவமனையில் விண்ணப்பித்துள்ளார். அங்கு, ரெக்கார்ட் கிளர்க்காக பணிபுரிந்து வந்த மணியன் என்பவர், சான்றிதழ் அளிக்க ரூ. 150 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க மனமில்லாத ரமேஷ், இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
பின்னர், லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய நோட்டுகளை பெற்றுக் கொண்ட ரமேஷ், அதனை மணியனிடம் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு பதுங்கிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், மணியனை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக மணியனுக்கு இரண்டாண்டு சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதம் விதித்து நீதிபதி ஜான் மினோ தீர்ப்பளித்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர், கோவை காந்திபுரம் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2008-ம் ஆண்டு உடற்தகுதி சான்றிதழ் வேண்டி கோவை அரசு மருத்துவமனையில் விண்ணப்பித்துள்ளார். அங்கு, ரெக்கார்ட் கிளர்க்காக பணிபுரிந்து வந்த மணியன் என்பவர், சான்றிதழ் அளிக்க ரூ. 150 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க மனமில்லாத ரமேஷ், இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
பின்னர், லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய நோட்டுகளை பெற்றுக் கொண்ட ரமேஷ், அதனை மணியனிடம் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு பதுங்கிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், மணியனை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக மணியனுக்கு இரண்டாண்டு சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதம் விதித்து நீதிபதி ஜான் மினோ தீர்ப்பளித்தார்.