ரூ. 150 லஞ்சம் வாங்கிய மருத்துவமனை பணியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் உடற்தகுதி சான்றிதழ் வழங்க ரூ. 150 லஞ்சமாகப் பெற்ற ஊழியருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் உடற்தகுதி சான்றிதழ் வழங்க ரூ. 150 லஞ்சமாகப் பெற்ற ஊழியருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர், கோவை காந்திபுரம் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2008-ம் ஆண்டு உடற்தகுதி சான்றிதழ் வேண்டி கோவை அரசு மருத்துவமனையில் விண்ணப்பித்துள்ளார். அங்கு, ரெக்கார்ட் கிளர்க்காக பணிபுரிந்து வந்த மணியன் என்பவர், சான்றிதழ் அளிக்க ரூ. 150 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க மனமில்லாத ரமேஷ், இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். 

பின்னர், லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய நோட்டுகளை பெற்றுக் கொண்ட ரமேஷ், அதனை மணியனிடம் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு பதுங்கிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், மணியனை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக மணியனுக்கு இரண்டாண்டு சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதம் விதித்து நீதிபதி ஜான் மினோ தீர்ப்பளித்தார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...