வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

கோவை மாவட்டம் வால்பாறையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 66-ம் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.

கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 66-ம் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. 



மு.பு.சு.மதனகோபால் முதலியார் கொடியேற்றி விழாவைத் துவக்கி வைத்தார். நேற்று முதல் வரும் 31-ம் தேதி வரை நடைபெறும் திருவிழாவில் திருக்கல்யாணம், கிராமிய கலைநிகழ்ச்சிகள், கரகாட்டம், பக்தர்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி, அன்னதானம், நகைச்சுவை பாட்டு மன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும், வால்பாறை தாலுகா அளவில் நடைபெறும் முதலாம் ஆண்டு மாபெரும் சுழற்கோப்பை கபடி போட்டி நடைபெற உள்ளது. பங்குனி உத்திர திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வெளியூர்களிலிருந்தும், அருகிலுள்ள பல்வேறு எஸ்டேட் பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...