கூட்டுறவு சங்கத் தேர்தல் அதிகாரியைக் கண்டித்து சமையல் செய்து உள்ளிருப்பு போராட்டம்

திருப்பூர் அருகே கூட்டுறவு சங்கத் தேர்தலில் வேட்புமனு பரிசீலனை செய்து பட்டியலை வெளியிடாததற்கும், அலுவலகத்திற்கு தேர்தல் அதிகாரி வராததைக் கண்டித்தும் தி.மு.க.வினர் சமையல் செய்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் : திருப்பூர் அருகே கூட்டுறவு சங்கத் தேர்தலில் வேட்புமனு பரிசீலனை செய்து பட்டியலை வெளியிடாததற்கும், அலுவலகத்திற்கு தேர்தல் அதிகாரி வராததைக் கண்டித்தும் தி.மு.க.வினர் சமையல் செய்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். 



தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்டம் ஊத்துகுளி ஒன்றியத்திற்குட்பட்ட எண்: 414 விருமாண்டம் பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கான 11 இயக்குநர்களுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில், தி.மு.க.,வினர் 4 பேரும், காங்கிரசில் 3 பேரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்டு இருபது பேர் இறுதி செய்யப்பட்டனர். 

இந்நிலையில், இன்று காலை இறுதிவேட்பாளர் பட்டியலை வெளியிடாமலும், தேர்தல் அதிகாரி வராமல் காலம் தாழ்த்தி அ.தி.மு.க.,வினருக்கு சாதகமாக செயல்படுவதாகக் கூறி வங்கி வளாகத்திலேயே சமையல் செய்து தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...