காவிரி மேலாண்மை வாரியம் அமைவதில் சந்தேகம்..? முதலமைச்சர் நாளை அவசர ஆலோசனை

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் எந்தவித முடிவும் எடுக்காததால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் எந்தவித முடிவும் எடுக்காததால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் விடுத்த கெடு நாளையும் முடிவடைகிறது. இந்த நிலையில், இது தொடர்பாக ஆலோசிக்கப் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், அருண்ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், காவிரி மேலாண்மை அமைப்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், இன்றைய மத்திய அமைச்சரவை கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீர்வளத்துறையின் காவிரி பங்கீடு தொடர்பாக, மத்திய சட்ட அமைச்சகத்திடம் மத்திய அரசு கருத்து கேட்டிருந்தது. இதனிடையே, காவிரி பங்கீட்டு குழுவில் எத்தனை பேர் இடம்பெறுவது, யாருக்கு என்ன அதிகாரம் என்பது தொடர்பாக தமிழகம், கர்நாடகா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 

தமிழகம், கர்நாடகா இடையேயான கருத்து வேறுபாடுகளை உச்சநீதிமன்றமே தீர்க்க வேண்டும் என மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான பரிந்துரையை, சட்ட அமைச்சகம், மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்கு அனுப்பி உள்ளதாகக் கூறப்படுகிறது.  இதனால், இரு மாநில பிரச்னையை தீர்த்து வைக்கும்படி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கல் செய்யலாம். அவ்வாறு, மனு தாக்கல் செய்ய மத்திய அரசு தாமதிக்கும் பட்சத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் சிக்கல் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே, கெடு முடிந்த பிறகும் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காவிட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாளை (மார்ச் 29) மாலை மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனை நடக்க உள்ளது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...