கோவை : கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், திடீரென ஏற்படும் தீ விபத்துக்களை தடுக்கும் ஒத்திகை செயல்முறை விளக்கம் கோவையில் நடைபெற்றது.
கோவை : கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், திடீரென ஏற்படும் தீ விபத்துக்களை தடுக்கும் ஒத்திகை செயல்முறை விளக்கம் கோவையில் நடைபெற்றது.
எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பீளமேடு தீயணைப்புத்துறை வீரர்களின் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை குறித்த ஒத்திகை செயல்முறை விளக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், திடீரென ஏற்படும் தீ விபத்துக்களை தடுக்கும் முறை செய்து காட்டப்பட்டது. வீட்டில் இருக்கும் பொழுது தீ விபத்து ஏற்பட்டால், அதனை தடுக்கும் முறைகள் குறித்தும் விளக்கப்பட்டது. தீ விபத்துகளில் இருந்து தற்காத்து கொள்ளும் யுக்திகளையும் தீயணைக்கும் வீரர்கள் செய்து காட்டினர்.
மேலும், கோடை காலத்தில் தீ விபத்துகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு விரைவாக தகவல் கொடுக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்ட பகுதி கோவை சர்வதேச விமான நிலையம் அருகில் இருப்பதால், மிகப்பெரிய அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது இருக்கும் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பீளமேடு தீயணைப்புத்துறை வீரர்களின் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை குறித்த ஒத்திகை செயல்முறை விளக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், திடீரென ஏற்படும் தீ விபத்துக்களை தடுக்கும் முறை செய்து காட்டப்பட்டது. வீட்டில் இருக்கும் பொழுது தீ விபத்து ஏற்பட்டால், அதனை தடுக்கும் முறைகள் குறித்தும் விளக்கப்பட்டது. தீ விபத்துகளில் இருந்து தற்காத்து கொள்ளும் யுக்திகளையும் தீயணைக்கும் வீரர்கள் செய்து காட்டினர்.
மேலும், கோடை காலத்தில் தீ விபத்துகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு விரைவாக தகவல் கொடுக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்ட பகுதி கோவை சர்வதேச விமான நிலையம் அருகில் இருப்பதால், மிகப்பெரிய அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது இருக்கும் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.