கோடை தீ விபத்துகளை தடுக்கும் ஒத்திகை நிகழ்ச்சி

கோவை : கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், திடீரென ஏற்படும் தீ விபத்துக்களை தடுக்கும் ஒத்திகை செயல்முறை விளக்கம் கோவையில் நடைபெற்றது.

கோவை : கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், திடீரென ஏற்படும் தீ விபத்துக்களை தடுக்கும் ஒத்திகை செயல்முறை விளக்கம் கோவையில் நடைபெற்றது. 

எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பீளமேடு தீயணைப்புத்துறை வீரர்களின் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை குறித்த ஒத்திகை செயல்முறை விளக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், திடீரென ஏற்படும் தீ விபத்துக்களை தடுக்கும் முறை செய்து காட்டப்பட்டது. வீட்டில் இருக்கும் பொழுது தீ விபத்து ஏற்பட்டால், அதனை தடுக்கும் முறைகள் குறித்தும் விளக்கப்பட்டது. தீ விபத்துகளில் இருந்து தற்காத்து கொள்ளும் யுக்திகளையும் தீயணைக்கும் வீரர்கள் செய்து காட்டினர்.

மேலும், கோடை காலத்தில் தீ விபத்துகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு விரைவாக தகவல் கொடுக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்ட பகுதி கோவை சர்வதேச விமான நிலையம் அருகில் இருப்பதால், மிகப்பெரிய அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது இருக்கும் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...