காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அனைத்து அ.தி.மு.க எம்.பி.க்களும் தற்கொலை செய்து கொள்வோம் என மாநிலங்களவையில் அ.தி.மு,.க எம்.பி நவநீத கிருஷ்ணன் ஆவேசமாகப் பேசினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அனைத்து அ.தி.மு.க எம்.பி.க்களும் தற்கொலை செய்து கொள்வோம் என மாநிலங்களவையில் அ.தி.மு,.க எம்.பி நவநீத கிருஷ்ணன் ஆவேசமாகப் பேசினார்.
மாநிலங்களவையில் ஆவேசமாக அவர் பேசியதாவது :- காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும். உச்சநீதிமன்றம் உத்தரவுக்கு பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தவில்லை எனில், அரசியல்சாசனம் அர்த்தமற்றதாகி விடும். உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தவில்லை என்றால் எதற்காக அரசியலமைப்பு சட்டம் உள்ளது..?. தமிழகத்தில் எங்களை ராஜினாமா செய்ய சொல்கிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அனைத்து அ.தி.மு.க எம்.பி.க்களும் தற்கொலை செய்து கொள்வோம், இவ்வாறு அவர் கூறினார். காவிரி பிரச்சனைக்கு காரணமே தேசியக் கட்சிகள் தான் என அ.தி.மு.க., எம்.பி., வேணுகோபால் கூறினார்.