நெஞ்சுவலி காரணமாக தாய் உயிரிழந்த நிலையிலும், கோவையைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர் சோகத்துடன் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதினர்.
கோவை: நெஞ்சுவலி காரணமாக தாய் உயிரிழந்த நிலையிலும், கோவையைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர் சோகத்துடன் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதினர்.
கல்வீரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அன்புச் செல்வன். அதேபகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று அவருக்கு ஆங்கிலம் இரண்டாம் தாள் போதுத் தேர்வு நடைபெற்றது. ஆனால், இன்று காலை திடீரென அவரது தாய் வெங்கடேஸ்வரி நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார்.
தாயின் இறப்பு ஒரு புறம் இருந்தாலும் தேர்வை எழுத வேண்டும் என்ற நோக்கத்தில், சோகத்துடன் அழுதபடியே பள்ளிக்கு சென்ற அன்புச் செல்வன் தேர்வை எழுதி சென்றார்.
தேர்வு எழுதி முடித்தவுடன், தாய் உடல் வைக்கப்பட்ட கோவை அரசு மருத்துவக் கல்லூரிக்கு சென்ற அவர் உடலைப் பெற்றுக் கொண்டு தனது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டத்திற்குச் சென்றார். இந்த சம்பவம் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கல்வீரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அன்புச் செல்வன். அதேபகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று அவருக்கு ஆங்கிலம் இரண்டாம் தாள் போதுத் தேர்வு நடைபெற்றது. ஆனால், இன்று காலை திடீரென அவரது தாய் வெங்கடேஸ்வரி நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார்.
தாயின் இறப்பு ஒரு புறம் இருந்தாலும் தேர்வை எழுத வேண்டும் என்ற நோக்கத்தில், சோகத்துடன் அழுதபடியே பள்ளிக்கு சென்ற அன்புச் செல்வன் தேர்வை எழுதி சென்றார்.
தேர்வு எழுதி முடித்தவுடன், தாய் உடல் வைக்கப்பட்ட கோவை அரசு மருத்துவக் கல்லூரிக்கு சென்ற அவர் உடலைப் பெற்றுக் கொண்டு தனது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டத்திற்குச் சென்றார். இந்த சம்பவம் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.