ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெறும் போராட்டம் தொடர்பாக பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் முழுமையான செய்திகள் பதிவு செய்யப்படுவதில்லை என்று குற்றம்சாட்டி கோவையில் இன்று மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை : ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெறும் போராட்டம் தொடர்பாக பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் முழுமையான செய்திகள் பதிவு செய்யப்படுவதில்லை என்று குற்றம்சாட்டி கோவையில் இன்று மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு அம்மாவட்ட மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட மக்களின் போரட்டத்திற்கு ஆதரவாக கோவையில் இன்று மாணவர் அமைப்பைச் சேர்ந்த 10 பேர் போராட்டம் நடத்தினர்.
மேலும், தூத்துக்குடியில் நடைபெறும் போராட்டம் தொடர்பாக பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் முழுமையான செய்திகள் பதிவு செய்யப்படுவதில்லை என்று குற்றம்சாட்டிய அவர்கள் அவினாசி சாலையில் உள்ள தினத்தந்தி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும், நடிகைகள் குறித்த செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக குற்றம்சாட்டிய அவர்கள் அவினாசி சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்ளிட்ட 12 பேரை கைது செய்தனர். இந்த போராட்டத்தால் அவினாசி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு அம்மாவட்ட மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட மக்களின் போரட்டத்திற்கு ஆதரவாக கோவையில் இன்று மாணவர் அமைப்பைச் சேர்ந்த 10 பேர் போராட்டம் நடத்தினர்.
மேலும், தூத்துக்குடியில் நடைபெறும் போராட்டம் தொடர்பாக பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் முழுமையான செய்திகள் பதிவு செய்யப்படுவதில்லை என்று குற்றம்சாட்டிய அவர்கள் அவினாசி சாலையில் உள்ள தினத்தந்தி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும், நடிகைகள் குறித்த செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக குற்றம்சாட்டிய அவர்கள் அவினாசி சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்ளிட்ட 12 பேரை கைது செய்தனர். இந்த போராட்டத்தால் அவினாசி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.