காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெண் தர்ணா..!

கோவை: கோவையில் பண மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக ரூ. 1.5 லட்சம் பணத்தை பெற்று ஏமாற்றிய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: கோவையில் பண மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக ரூ. 1.5 லட்சம் பணத்தை பெற்று ஏமாற்றிய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சுமையா சையத். இவரிடம் ஒரு லட்சம் கொடுத்தால், இரட்டிப்பாகப் பணம் தருவதாகக் கூறி பெனாசிர் பானு என்பவர் ரூ. 7 லட்சம் பணம் பெற்றதாகத் தெரிகிறது. ஆனால், கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பெனாசிர் பானு மீது மீது நடவடிக்கை எடுக்கக் கோவை மாநகர குற்றப்பிரிவு ஆய்வாளர் கலையரசியை அணுகியுள்ளார். அப்போது, இந்தப் புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க ஆய்வாளர் ரூ. 1.5 லட்சம் கையூட்டு பெற்றதாகவும், பணத்தை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் சுமையா சையத் கூறியுள்ளார். 

மேலும், தற்போது வழக்கை திரும்பப் பெறவில்லை எனில், விபச்சார வழக்கில் கைது செய்வோம் என மிரட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார். எனவே, மோசடி செய்தவர் மீதும், காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கு வந்த பந்தயசாலை காவல் துறையினர் சமரசப்படுத்தியதை அடுத்து, சுமையா சையத் போராட்டத்தை கைவிட்டார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...