கோவை: கோவையில் பண மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக ரூ. 1.5 லட்சம் பணத்தை பெற்று ஏமாற்றிய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவையில் பண மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக ரூ. 1.5 லட்சம் பணத்தை பெற்று ஏமாற்றிய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சுமையா சையத். இவரிடம் ஒரு லட்சம் கொடுத்தால், இரட்டிப்பாகப் பணம் தருவதாகக் கூறி பெனாசிர் பானு என்பவர் ரூ. 7 லட்சம் பணம் பெற்றதாகத் தெரிகிறது. ஆனால், கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பெனாசிர் பானு மீது மீது நடவடிக்கை எடுக்கக் கோவை மாநகர குற்றப்பிரிவு ஆய்வாளர் கலையரசியை அணுகியுள்ளார். அப்போது, இந்தப் புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க ஆய்வாளர் ரூ. 1.5 லட்சம் கையூட்டு பெற்றதாகவும், பணத்தை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் சுமையா சையத் கூறியுள்ளார்.
மேலும், தற்போது வழக்கை திரும்பப் பெறவில்லை எனில், விபச்சார வழக்கில் கைது செய்வோம் என மிரட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார். எனவே, மோசடி செய்தவர் மீதும், காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கு வந்த பந்தயசாலை காவல் துறையினர் சமரசப்படுத்தியதை அடுத்து, சுமையா சையத் போராட்டத்தை கைவிட்டார்.

குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சுமையா சையத். இவரிடம் ஒரு லட்சம் கொடுத்தால், இரட்டிப்பாகப் பணம் தருவதாகக் கூறி பெனாசிர் பானு என்பவர் ரூ. 7 லட்சம் பணம் பெற்றதாகத் தெரிகிறது. ஆனால், கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பெனாசிர் பானு மீது மீது நடவடிக்கை எடுக்கக் கோவை மாநகர குற்றப்பிரிவு ஆய்வாளர் கலையரசியை அணுகியுள்ளார். அப்போது, இந்தப் புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க ஆய்வாளர் ரூ. 1.5 லட்சம் கையூட்டு பெற்றதாகவும், பணத்தை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் சுமையா சையத் கூறியுள்ளார்.
மேலும், தற்போது வழக்கை திரும்பப் பெறவில்லை எனில், விபச்சார வழக்கில் கைது செய்வோம் என மிரட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார். எனவே, மோசடி செய்தவர் மீதும், காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கு வந்த பந்தயசாலை காவல் துறையினர் சமரசப்படுத்தியதை அடுத்து, சுமையா சையத் போராட்டத்தை கைவிட்டார்.