மானிய விலை நாற்றுக்களை பெற்று பயனடைய கோரிக்கை

மானிய விலையில் கொடுக்கப்படவுள்ள ஒரு லட்சம் நாற்றுகளை வாங்கி பயனடைய வேண்டும் என்று விவசாயிகளுக்கு தோட்டக் கலைப்பண்ணை கோரிக்கை விடுத்துள்ளது.


மேட்டுப்பாளையம்: மானிய விலையில் கொடுக்கப்படவுள்ள ஒரு லட்சம் நாற்றுகளை வாங்கி பயனடைய வேண்டும் என்று விவசாயிகளுக்கு தோட்டக் கலைப்பண்ணை கோரிக்கை விடுத்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாரில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான கல்லார் அரசு பழப்பண்ணையில் மங்குஸ்தான், ரம்பூட்டான், துரியன், பலா உள்ளிட்ட பல்வேறு விதமான பழ வகைகள் உற்பத்தி செய்யப்பட்டு, குறைந்த விலையில் பொதுமக்களுக்கு சீசனுக்கு தகுந்தவாறு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன் இவைகளை சார்ந்த பழ நாற்றுகள் மற்றும் குறுமிளகு, பாக்கு, தேயிலை, கருவேப்பிலை, எலுமிச்சை, ஜாதிக்காய் உள்ளிட்ட பல விதமான விவசாயிகளுக்குப் பயன்பெறும் நாற்றுகள் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.



தற்போது, இந்தப் பண்ணையில் ஏற்கனவே பதியம் செய்யப்பட்டு தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் மூலம் தயார் செய்த ஒரு லட்சம் நாற்றுகள் விற்பனைக்கு தயாராக உள்ளன. ஆண்டு முழுவதும் சீரான சீதோஷண நிலையில் தயாரிக்கப்படும் நாற்றும் மிக நன்கு வேகமாக வளரக் கூடியவையாகக் கருதப்படுகிறது. வெளிச்சந்தைகளை விட சுமார் 50 சதவீத மானிய விலையில் அளிக்கப்பட்டு வரும் இந்தப் பண்ணையில் பாக்கு, கருவேப்பிலை, தேயிலை, குறுமிளகு, எலுமிச்சை, ஜாதிக்காய் என 15 வகையான நாற்றுகள் விற்பனைக்கு தயாராக உள்ளதாக தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது. அத்துடன் பலா, மங்குஸ்தான், லிச்சி, பப்ளிமாஸ் உள்ளிட்ட பழவகை நாற்றுகளும் தயாராக உள்ளன. 

இதனை கோவை, நீலகிரி மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள விவசாயிகளும் வாங்கி பயனடையலாம் என தோட்டக்கலைத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...