கோவையில் மாயமான பள்ளி மாணவர்கள் நான்கு பேர் கோவாவில் போலீசாரால் மீட்கப்பட்டனர்.
கோவை: கோவையில் மாயமான பள்ளி மாணவர்கள் நான்கு பேர் கோவாவில் போலீசாரால் மீட்கப்பட்டனர்.
கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள ஏர் போர்ஸ் பள்ளியில் படிக்கும் மாணவர் ராஜேஷ் கண்ணன். 9-ம் வகுப்பு படித்து வரும் இவர் தனது பள்ளி தோழர்களான அபிஷேக், அரவிந்த், அமர்நாத் ஆகியோருடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் மாயமாகினர்.
மேலும், வீட்டில் இருந்து பணத்தை எடுத்துச் சென்ற இவர்கள் பள்ளி விடுமுறையைக் கொண்டாட பெற்றோருக்குத் தெரியாமல் கோவா சென்றனர். வெளியே சென்ற மாணவர்கள் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் மாயமான மாணவர்கள் நான்கு பேரும் கோவாவில் இருப்பது தெரியவந்தது. கோவா போலீசார் அந்த 4 சிறுவர்களையும் மீட்டுள்ளனர். அவர்களை மீட்க கோவை மாநகர காவல் துறையினர் கோவையில் இருந்து கோவா சென்றுள்ளனர்.
கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள ஏர் போர்ஸ் பள்ளியில் படிக்கும் மாணவர் ராஜேஷ் கண்ணன். 9-ம் வகுப்பு படித்து வரும் இவர் தனது பள்ளி தோழர்களான அபிஷேக், அரவிந்த், அமர்நாத் ஆகியோருடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் மாயமாகினர்.
மேலும், வீட்டில் இருந்து பணத்தை எடுத்துச் சென்ற இவர்கள் பள்ளி விடுமுறையைக் கொண்டாட பெற்றோருக்குத் தெரியாமல் கோவா சென்றனர். வெளியே சென்ற மாணவர்கள் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் மாயமான மாணவர்கள் நான்கு பேரும் கோவாவில் இருப்பது தெரியவந்தது. கோவா போலீசார் அந்த 4 சிறுவர்களையும் மீட்டுள்ளனர். அவர்களை மீட்க கோவை மாநகர காவல் துறையினர் கோவையில் இருந்து கோவா சென்றுள்ளனர்.