கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க., அரசில் தான் அதிக ஊழல்கள் நடைபெற்றதாக பா.ஜ.க., தலைவர் அமித்ஷா கூறியது, பா.ஜ.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க., அரசில் தான் அதிக ஊழல்கள் நடைபெற்றதாக பா.ஜ.க., தலைவர் அமித்ஷா கூறியது, பா.ஜ.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் இன்று செய்தியாளர்களிடம் அமித்ஷா பேசுகையில், "சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களைக் கூறினார். அப்போது, “ஊழல் மலிந்த ஆட்சிக்குப் போட்டி வைத்தால், அதில் எடியூரப்பா அரசுக்குதான் முதலிடம் கிடைக்கும்” என்று கூறினார். இந்த சம்பவத்தில், அமித் ஷாவுக்கு அருகில்தான் எடியூரப்பா உட்கார்ந்திருந்தார்.
அமித் ஷா கூறியதைக் கேட்டதும் அவர் ஷாக் ஆகிவிட்டார். அமித் ஷாவுக்கு அருகில் இருந்த மற்றொரு தலைவர் உடனடியாக அவருக்கு தவறை சுட்டிக்காட்டினார்.
சுதாரித்துக் கொண்ட அமித்ஷா உடனடியாக மாற்றிக் கொண்டு காங்கிரஸ் அரசு என்று கூறினார். அமித்ஷாவின் இந்தப் பேச்சு உடனடியாக சமூகவலைதளத்தில் வைரலாகப் பரவியது. பலரும் இதனைப் பகிர்ந்தனர். குறிப்பாக, காங்கிரஸ் கட்சியினர் அதிக வேகமாகப் பகிர்ந்தனர்.
முதலமைச்சர் சித்தராமையாவும் இதனை விட்டுவைக்கவில்லை. அமித்ஷா பேசிய வீடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர், ‘பொய்யை மட்டுமே பேசிவரும் அமித்ஷா இறுதியாக இன்று உண்மையைப் பேசிவிட்டார். நன்றி அமித்ஷா’ என்று குறிப்பிட்டார்.
கர்நாடகாவில் இன்று செய்தியாளர்களிடம் அமித்ஷா பேசுகையில், "சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களைக் கூறினார். அப்போது, “ஊழல் மலிந்த ஆட்சிக்குப் போட்டி வைத்தால், அதில் எடியூரப்பா அரசுக்குதான் முதலிடம் கிடைக்கும்” என்று கூறினார். இந்த சம்பவத்தில், அமித் ஷாவுக்கு அருகில்தான் எடியூரப்பா உட்கார்ந்திருந்தார்.
அமித் ஷா கூறியதைக் கேட்டதும் அவர் ஷாக் ஆகிவிட்டார். அமித் ஷாவுக்கு அருகில் இருந்த மற்றொரு தலைவர் உடனடியாக அவருக்கு தவறை சுட்டிக்காட்டினார்.
சுதாரித்துக் கொண்ட அமித்ஷா உடனடியாக மாற்றிக் கொண்டு காங்கிரஸ் அரசு என்று கூறினார். அமித்ஷாவின் இந்தப் பேச்சு உடனடியாக சமூகவலைதளத்தில் வைரலாகப் பரவியது. பலரும் இதனைப் பகிர்ந்தனர். குறிப்பாக, காங்கிரஸ் கட்சியினர் அதிக வேகமாகப் பகிர்ந்தனர்.
முதலமைச்சர் சித்தராமையாவும் இதனை விட்டுவைக்கவில்லை. அமித்ஷா பேசிய வீடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர், ‘பொய்யை மட்டுமே பேசிவரும் அமித்ஷா இறுதியாக இன்று உண்மையைப் பேசிவிட்டார். நன்றி அமித்ஷா’ என்று குறிப்பிட்டார்.