பெண் கல்வியே நாட்டையும், வீட்டையும் முன்னேற்றும் என அவினாசிலிங்கம் மகளிர் மனையியல் மற்றும் உயராய்வு கல்வி நிறுவன துணை வேந்தர் பிரேமாவதி விஜயன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி : பெண் கல்வியே நாட்டையும், வீட்டையும் முன்னேற்றும் என அவினாசிலிங்கம் மகளிர் மனையியல் மற்றும் உயராய்வு கல்வி நிறுவன துணை வேந்தர் பிரேமாவதி விஜயன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் தனியார் மகளிர் கல்லூரியில் 15-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அவினாசிலிங்கம் மகளிர் மனையியல் மற்றும் உயராய்வு கல்வி நிறுவன துணை வேந்தர் பிரேமாவதி விஜயன், 250 மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கிக் கவுரவித்தார்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "பெண்களுக்குத் தான் நாட்டைக் காப்பாற்ற வேண்டிய கடமையுள்ளது. ஒரு பெண் படித்தால் வீட்டையும், சமுதாயத்தையும், நாட்டையும் முன்னேற்ற முடியும். பணிக்கு செல்லும் பெண்களுக்கு ஆண்கள் நல்ல ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். பெற்றோர்கள் எவ்வாறு உள்ளார்களோ, அதைப்போலத் தான் பிள்ளைகளும் இருப்பார்கள். எனவே, சிறுவயது முதலே தங்களது பிள்ளைகளுக்கு நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும்," என்றார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் தனியார் மகளிர் கல்லூரியில் 15-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அவினாசிலிங்கம் மகளிர் மனையியல் மற்றும் உயராய்வு கல்வி நிறுவன துணை வேந்தர் பிரேமாவதி விஜயன், 250 மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கிக் கவுரவித்தார்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "பெண்களுக்குத் தான் நாட்டைக் காப்பாற்ற வேண்டிய கடமையுள்ளது. ஒரு பெண் படித்தால் வீட்டையும், சமுதாயத்தையும், நாட்டையும் முன்னேற்ற முடியும். பணிக்கு செல்லும் பெண்களுக்கு ஆண்கள் நல்ல ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். பெற்றோர்கள் எவ்வாறு உள்ளார்களோ, அதைப்போலத் தான் பிள்ளைகளும் இருப்பார்கள். எனவே, சிறுவயது முதலே தங்களது பிள்ளைகளுக்கு நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும்," என்றார்.