தேசிய அளவில் நடக்கும் குடும்ப தலைவிகளுக்கான 'திருமதி இந்தியா' பட்டத்திற்கான இறுதிப் போட்டிக்கு உதகையைச் சேர்ந்த பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி : தேசிய அளவில் நடக்கும் குடும்ப தலைவிகளுக்கான 'திருமதி இந்தியா' பட்டத்திற்கான இறுதிப் போட்டிக்கு உதகையைச் சேர்ந்த பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் செயல்படும் ஒரு தனியார் அமைப்பு 'குயின் ஆப் சஸ்டெயின்ஸ் 2018' என்ற பெயரில், ஆண்டுதோறும் குடும்ப தலைவிகளுக்கான 'திருமதி இந்தியா' பட்டத்துக்கான போட்டியை நடத்தி வருகிறது. குடும்ப தலைவிகள் மத்தியில் தைரியம், அவர்களின் திறமையை வெளிக் கொணர்வதை நோக்கமாகக் கொண்டு இப்போட்டி நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான போட்டிக்கு போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இரு சுற்றுகளின் முடிவில், நாடு முழுக்க இருந்து 49 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில், நீலகிரி மாவட்டம், லவ்டேல் சர்வதேச பள்ளியில் அலுவலக பணியாளராக பணிபுரியும் நிஷாசிங் (32) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரின் கணவர் தாகூர் கமல் சிங் (36) இதே பள்ளியில் உணவு தயாரிப்பு மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு, பள்ளி நிர்வாகம் உட்பட பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் செயல்படும் ஒரு தனியார் அமைப்பு 'குயின் ஆப் சஸ்டெயின்ஸ் 2018' என்ற பெயரில், ஆண்டுதோறும் குடும்ப தலைவிகளுக்கான 'திருமதி இந்தியா' பட்டத்துக்கான போட்டியை நடத்தி வருகிறது. குடும்ப தலைவிகள் மத்தியில் தைரியம், அவர்களின் திறமையை வெளிக் கொணர்வதை நோக்கமாகக் கொண்டு இப்போட்டி நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான போட்டிக்கு போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இரு சுற்றுகளின் முடிவில், நாடு முழுக்க இருந்து 49 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில், நீலகிரி மாவட்டம், லவ்டேல் சர்வதேச பள்ளியில் அலுவலக பணியாளராக பணிபுரியும் நிஷாசிங் (32) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரின் கணவர் தாகூர் கமல் சிங் (36) இதே பள்ளியில் உணவு தயாரிப்பு மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு, பள்ளி நிர்வாகம் உட்பட பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.