கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உடல் நலக்குறைவால் காட்டுயானை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிறுமுகை வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உடல் நலக்குறைவால் காட்டுயானை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிறுமுகை வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாகும். இங்கு காட்டுயானை, காட்டுமாடு, மான் என அரியவகை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது, வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக வனவிலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் தட்டுபாடு ஏற்படுகிறது. இதனால், அவைகள் வனத்தை விட்டு நீர்நிலைகளை தேடி அழைந்து வருகின்றன.
இந்நிலையில், இன்று சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட மயில்மொக்கை என்ற பகுதியில் நான்கு யானைகள் கொண்ட கூட்டம் தண்ணீர் தேடி வந்துள்ளது. அதில், 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உடல் நலக்குறைவால் அங்கேயே நின்று கொண்டிருந்தது. இதனை அப்பகுதியில் இன்று மாலை ரோந்து சென்ற வனத்துறையினர் பார்த்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், கால்நடை மருத்துவர் தியாகராஜன் மற்றும் சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோகரன் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, யானை உடல் சோர்ந்து கீழே விழுந்து மயங்கி பரிதாபமாக உயிரிழந்தது.

யானையை பரிசோதித்த மருத்துவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, யானை உயிரிழந்ததை உடற்கூறு ஆய்வு மூலம் உறுதி செய்தனர். பின்னர், யானை அப்பகுதியிலேயே புதைக்கப்பட்டது. தற்போது, வனத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியால் வனவிலங்குகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டு வருவதால் வனத்துறையினர் தண்ணீர் தொட்டிகளை அடர்ந்த வனத்தில் அமைப்பதை அதிகரிக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாகும். இங்கு காட்டுயானை, காட்டுமாடு, மான் என அரியவகை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது, வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக வனவிலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் தட்டுபாடு ஏற்படுகிறது. இதனால், அவைகள் வனத்தை விட்டு நீர்நிலைகளை தேடி அழைந்து வருகின்றன.
இந்நிலையில், இன்று சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட மயில்மொக்கை என்ற பகுதியில் நான்கு யானைகள் கொண்ட கூட்டம் தண்ணீர் தேடி வந்துள்ளது. அதில், 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உடல் நலக்குறைவால் அங்கேயே நின்று கொண்டிருந்தது. இதனை அப்பகுதியில் இன்று மாலை ரோந்து சென்ற வனத்துறையினர் பார்த்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், கால்நடை மருத்துவர் தியாகராஜன் மற்றும் சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோகரன் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, யானை உடல் சோர்ந்து கீழே விழுந்து மயங்கி பரிதாபமாக உயிரிழந்தது.

யானையை பரிசோதித்த மருத்துவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, யானை உயிரிழந்ததை உடற்கூறு ஆய்வு மூலம் உறுதி செய்தனர். பின்னர், யானை அப்பகுதியிலேயே புதைக்கப்பட்டது. தற்போது, வனத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியால் வனவிலங்குகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டு வருவதால் வனத்துறையினர் தண்ணீர் தொட்டிகளை அடர்ந்த வனத்தில் அமைப்பதை அதிகரிக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.