விவசாய நிலத்தில் தண்ணீர் எடுத்ததை தட்டிக் கேட்டவர் மீது தாக்குதல் : போலீசார் விசாரணை

திருப்பூரில் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து கல் குவாரிக்கு கொண்டு செல்வதைத் தட்டிக் கேட்ட விவசாயி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


திருப்பூர் : திருப்பூரில் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து கல் குவாரிக்கு கொண்டு செல்வதைத் தட்டிக் கேட்ட விவசாயி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.



 

மடத்துக்குளம் அருகே உள்ள கருப்பசாமிபுதூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து கல் குவாரிகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு லாரிகள் மூலமாக இரவு பகலாக தண்ணீர் எடுத்து செல்ப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த பிரச்சனையில் அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்ற விவசாயி தண்ணீர் எடுத்துச் சென்ற லாரியை மடக்கி தட்டிக்கேட்டார். 

அப்போது அந்த நிலத்தின் உரிமையாளர் செல்வபேபி என்பவர் லாரி டிரைவரின் உதவியுடன் தங்கவேலையும் அவரது மகன் சின்னதிரையையும் தாக்கியதாகத் தெரிகிறது. இதில் சின்னதுரையின் மண்டை உடைந்தது. மேலும், தங்கவேலு-வின் தாய்க்கும் காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. தொடர்ந்து அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இது குறித்து மடத்துக்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...