செயற்கை நிறமிகளுக்கு மாறாக இயற்கையாக 'டாரா ரெட்' என்ற புதிய நிறத்தை வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்கம் கல்வி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
கோவை : செயற்கை நிறமிகளுக்கு மாறாக இயற்கையாக 'டாரா ரெட்' என்ற புதிய நிறத்தை வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்கம் கல்வி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

உணவு, மருந்து, அலங்காரப் பொருட்கள் மற்றும் ஆடைகளுக்கு செயற்கை நிறமிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த செயற்கை நிறமிகளால் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், செயற்கை நிறமிகளுக்கு மாறாக இயற்கையாக 'டாரா ரெட்' என்ற புதிய நிறம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்கம் கல்வி நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட இந்த இயற்கை நிறமியானது, ரெட் டாமரைண்ட், டாமரண்டிஸ் இண்டிகா போன்ற மர வகைகளை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
"தற்போது, இந்த இயற்கை நிறமியை உணவு, மருந்து, அலங்காரப் பொருட்கள் மற்றும் ஆடைகளுக்கு பயன்படுத்தலாம். இதன்மூலம், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது." என வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்கம் கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் செந்தில்குமார் கூறினார்.
இந்த நிறத்தை உருவாக்கப் பயன்படுத்தப்படும் ரெட் டாமரைண்ட் மரங்கள் தேனி மாவட்டம் கம்பம், போடி பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன.

உணவு, மருந்து, அலங்காரப் பொருட்கள் மற்றும் ஆடைகளுக்கு செயற்கை நிறமிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த செயற்கை நிறமிகளால் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், செயற்கை நிறமிகளுக்கு மாறாக இயற்கையாக 'டாரா ரெட்' என்ற புதிய நிறம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்கம் கல்வி நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட இந்த இயற்கை நிறமியானது, ரெட் டாமரைண்ட், டாமரண்டிஸ் இண்டிகா போன்ற மர வகைகளை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
"தற்போது, இந்த இயற்கை நிறமியை உணவு, மருந்து, அலங்காரப் பொருட்கள் மற்றும் ஆடைகளுக்கு பயன்படுத்தலாம். இதன்மூலம், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது." என வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்கம் கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் செந்தில்குமார் கூறினார்.
இந்த நிறத்தை உருவாக்கப் பயன்படுத்தப்படும் ரெட் டாமரைண்ட் மரங்கள் தேனி மாவட்டம் கம்பம், போடி பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன.