விவசாய நிலங்கள் வழியாக உயிர்மின் கோபுரங்கள் அமைப்பதைக் கண்டித்து ஈரோட்டில் மே 6-ம் தேதி கோரிக்கை மாநாடு நடத்தப்பட உள்ளதாக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருப்பூர்: விவசாய நிலங்கள் வழியாக உயிர்மின் கோபுரங்கள் அமைப்பதைக் கண்டித்து ஈரோட்டில் மே 6-ம் தேதி கோரிக்கை மாநாடு நடத்தப்பட உள்ளதாக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பவர்கிரிட் நிறுவனமும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகமும் இணைந்து பல்வேறு உயர் மின் அழுத்த பாதை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவை பெரும்பாலும் விவசாய நிலங்கள் வழியாகவே செல்வதால் உயர் மின் கோபுரம் அமைக்கப்படும் இடத்தில் 90 மீட்டர் அளவிற்கு விவசாயம் மேற்கொள்ளக் கூடாது, கிணறுகள் வெட்டக்கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் மற்றும் பிரச்சனைகளை விவசாயிகள் சந்திக்க வேண்டிய சூழல் உள்ளது.
தமிழகத்தில் கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாகவும், நெடுஞ்சாலை ஓரங்களில் கேபிள்களாக பதிக்க வலியுறுத்தியும், விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதைக் கண்டித்தும் வரும் மே 6-ம் தேதி ஈரோட்டில் கோரிக்கை மாநாடு நடத்தப்பட உள்ளதாக திருப்பூரில் நடைபெற்ற விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்து மாநாட்டில் அறிவிக்கப்படும் என்றும் ஆலோசனை கூட்டத்தின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பவர்கிரிட் நிறுவனமும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகமும் இணைந்து பல்வேறு உயர் மின் அழுத்த பாதை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவை பெரும்பாலும் விவசாய நிலங்கள் வழியாகவே செல்வதால் உயர் மின் கோபுரம் அமைக்கப்படும் இடத்தில் 90 மீட்டர் அளவிற்கு விவசாயம் மேற்கொள்ளக் கூடாது, கிணறுகள் வெட்டக்கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் மற்றும் பிரச்சனைகளை விவசாயிகள் சந்திக்க வேண்டிய சூழல் உள்ளது.
தமிழகத்தில் கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாகவும், நெடுஞ்சாலை ஓரங்களில் கேபிள்களாக பதிக்க வலியுறுத்தியும், விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதைக் கண்டித்தும் வரும் மே 6-ம் தேதி ஈரோட்டில் கோரிக்கை மாநாடு நடத்தப்பட உள்ளதாக திருப்பூரில் நடைபெற்ற விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்து மாநாட்டில் அறிவிக்கப்படும் என்றும் ஆலோசனை கூட்டத்தின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.