6 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராத வணிக வளாக குளிர்பதனக் கிடங்கு: விவசாயிகள் கவலை

மேட்டுப்பாளையத்தில் விவசாயிகளுக்காக அமைக்கப்பட்ட வணிக வளாக குளிர்பதனக் கிடங்கு ஆறு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் பூட்டியே கிடக்கும் நிலையில், அது பயன்பாட்டிற்கு வருவதற்குள் இடிந்து விழும் என்று ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் விவசாயிகளுக்காக அமைக்கப்பட்ட வணிக வளாக குளிர்பதனக் கிடங்கு ஆறு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் பூட்டியே கிடக்கும் நிலையில், அது பயன்பாட்டிற்கு வருவதற்குள் இடிந்து விழும் என்று ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் விவசாய பூமிகள் நிறைந்த வேளாண் உற்பத்தி மையமாக இருந்து வருகிறது. இங்கு வாழைக்கு அடுத்தபடியாக காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், விவசாயிகள் சார்பில் காய்கறிகளை இருப்பு வைத்து வியாபாரம் செய்யும் வகையில் குளிர்பதன கிடங்குடன் கூடிய வணிக வளாகம் அமைக்க தமிழக அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது. தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் கடந்த 2012-ம் ஆண்டு ரூ.2 கோடி செலவில் குளிர்பதன கிடங்குடன் கூடிய வணிக வளாகம் அமைக்கப்பட்டது. 

அதற்காக சிக்கதாசம்பாளையத்தில் வருவாய்த் துறைக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு விவசாயிகளுக்காக 20-க்கும் மேற்பட்ட கடைகள், காய்கறிகள் கொட்டும் கொட்டகை, தரம் பிரிக்கும் மையம், 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்கு கட்டிடங்கள் கட்டப்பட்டன. 

ஆனால், இந்த வணிக வளாகம் கட்டப்பட்டு ஆறு ஆண்டுகள் ஆகியும் இதுவரை அதனை பயன்பாட்டிற்காக திறக்கப்படாமல் பூட்டியே கிடப்பதால் அதன் உறுதித் தன்மை இழந்து வருவதுடன், கட்டிடங்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு இடியும் நிலை ஏற்பட்டு வருகிறது.



கட்டிடம் கட்டப்பட்ட இடம் அரசுக்குச் சொந்தமாக இருந்தாலும் அதற்கு வழித்தடம் இல்லாத காரணத்தால் கட்டிடம் திறக்கப்படாமல் உள்ளது. தனியாரிடம் இருந்து வழித்தடத்தை வாங்க அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டு வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட போதும், வருவாய்த் துறையினர் தனியார் இடத்திற்கு உரிய பணம் கொடுக்காமல் அலட்சியம் காட்டுவதால் இந்த கட்டிடம் பூட்டியே கிடக்கிறது. எனவே இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...