வங்கியில் கடன் வாங்கித் தருவதாக கூறி போலி ஆவணங்கள் தயாரித்து ரூ. 4.91 லட்சம் மோசடி செய்த முன்னாள் ரயில்வே பாதுகாப்புப் படை காவலருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 லட்சம் இழப்பீடு தர கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோவை: வங்கியில் கடன் வாங்கித் தருவதாக கூறி போலி ஆவணங்கள் தயாரித்து ரூ. 4.91 லட்சம் மோசடி செய்த முன்னாள் ரயில்வே பாதுகாப்புப் படை காவலருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 லட்சம் இழப்பீடு தர கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோவை பீளமேடு பகுதியை அடுத்த ஜீவா வீதியை சேர்ந்தவர் குமார் (54). கடந்த 1989-ம் ஆண்டு வரை ரயில்வே பாதுகாப்புப் படையில் காவலராக பணியாற்றினார். முறையாக பணிக்கு வராததால் கடந்த 1991-ம் ஆண்டு பணியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், இந்தியன் வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி போலி ஆவணங்கள் தயாரித்து கோவையைச் சேர்ந்த 7 பேரிடமிருந்து ரூ. 4 லட்சத்து 91ஆயிரத்து 200 மோசடி செய்ததாக கடந்த 2009-ம் ஆண்டு மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை 3-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில், குமாருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 6 லட்சத்து 36 ஆயிரத்து 800 நஷ்ட ஈடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவும் நீதிபதி வேலுச்சாமி உத்தரவிட்டார்.
அரசு பணியிடங்களில் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி மோசடி செய்ததாக குமார் மீது ஏற்கனவே கோவை மாவட்டத்தில் பல்வேறு மோசடி இவர் மீது தொடரப்பட்டு கோவை 6-வது மற்றும் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
கோவை பீளமேடு பகுதியை அடுத்த ஜீவா வீதியை சேர்ந்தவர் குமார் (54). கடந்த 1989-ம் ஆண்டு வரை ரயில்வே பாதுகாப்புப் படையில் காவலராக பணியாற்றினார். முறையாக பணிக்கு வராததால் கடந்த 1991-ம் ஆண்டு பணியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், இந்தியன் வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி போலி ஆவணங்கள் தயாரித்து கோவையைச் சேர்ந்த 7 பேரிடமிருந்து ரூ. 4 லட்சத்து 91ஆயிரத்து 200 மோசடி செய்ததாக கடந்த 2009-ம் ஆண்டு மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை 3-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில், குமாருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 6 லட்சத்து 36 ஆயிரத்து 800 நஷ்ட ஈடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவும் நீதிபதி வேலுச்சாமி உத்தரவிட்டார்.
அரசு பணியிடங்களில் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி மோசடி செய்ததாக குமார் மீது ஏற்கனவே கோவை மாவட்டத்தில் பல்வேறு மோசடி இவர் மீது தொடரப்பட்டு கோவை 6-வது மற்றும் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.