கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஒருதலைபட்சமாக நடப்பதாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் தி.மு.க., எம்.எல்.ஏ., புகார் கூறியுள்ளார்.
கோவை: கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஒருதலைபட்சமாக நடப்பதாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் தி.மு.க., எம்.எல்.ஏ., புகார் கூறியுள்ளார்.
பால் உற்பத்தி, மீன்வளத்துறை, கைத்தறி மற்றும் சர்க்கரைதுறை என 15 அரசுத்துறை கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை கூட்டுறவு தேர்தல் ஆணையம் நடத்துகிறது. நேற்று நடந்த மனு தாக்கலில், கூட்டுறவு சங்க தனி அலுவலர்கள் அ.தி.மு.க வினருக்கு சாதகமாக நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காவல்துறை மற்றும் அடியாட்களை வைத்து பிற கட்சியினர் மிரட்டப்படுவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. கார்த்திக் (தி.மு.க.) கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், கடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலை போல, இந்த முறையும் ஆளுங்கட்சியினர் வேட்புமனு மட்டும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. தி.மு.க., உள்ளிட்ட மற்றவர்களின் மனு ஏற்கப்படவில்லை. மற்ற கட்சியினரின் வேட்புமனுவையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அனைத்து கட்சியினரை திரட்டிப் போராட்டம் நடத்தப்படும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
பால் உற்பத்தி, மீன்வளத்துறை, கைத்தறி மற்றும் சர்க்கரைதுறை என 15 அரசுத்துறை கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை கூட்டுறவு தேர்தல் ஆணையம் நடத்துகிறது. நேற்று நடந்த மனு தாக்கலில், கூட்டுறவு சங்க தனி அலுவலர்கள் அ.தி.மு.க வினருக்கு சாதகமாக நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காவல்துறை மற்றும் அடியாட்களை வைத்து பிற கட்சியினர் மிரட்டப்படுவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. கார்த்திக் (தி.மு.க.) கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், கடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலை போல, இந்த முறையும் ஆளுங்கட்சியினர் வேட்புமனு மட்டும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. தி.மு.க., உள்ளிட்ட மற்றவர்களின் மனு ஏற்கப்படவில்லை. மற்ற கட்சியினரின் வேட்புமனுவையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அனைத்து கட்சியினரை திரட்டிப் போராட்டம் நடத்தப்படும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.