விதிமுறைகளை மீறி கட்டிடம் கட்டப்பட்டதாகக் கூறி திருப்பூர் சிவா டெக்ஸ்டைல்ஸ் கட்டிடத்திற்கு சீல் வைத்து நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.
திருப்பூர்: விதிமுறைகளை மீறி கட்டிடம் கட்டப்பட்டதாகக் கூறி திருப்பூர் சிவா டெக்ஸ்டைல்ஸ் கட்டிடத்திற்கு சீல் வைத்து நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.
திருப்பூர் குமரன் சாலையில் இயங்கி வரும் சிவா டெக்ஸ்டைல்ஸ் கட்டிடமானது விதி முறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகவும், அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகவும் திருப்புர் மாநகராட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடத்திற்கு 24 மணி நேரத்திற்குள் சீல் வைக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து திருப்பூர் மூன்றாவது மண்டல உதவி ஆணையர் சபியுல்லா குமரன் சாலையில் உள்ள சிவா டெக்ஸ்டைல்ஸ் கட்டிடத்திற்கு சீல் வைத்தார்.

விதிமுறைகளை மீறி குமரன் சாலை மற்றும் புது மார்க்கெட் வீதியில் பல கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ள நிலையில், ஒரு கட்டிடத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ள சம்பவம் அனைத்து கட்டிடங்களுக்கும் தொடரும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் குமரன் சாலையில் இயங்கி வரும் சிவா டெக்ஸ்டைல்ஸ் கட்டிடமானது விதி முறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகவும், அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகவும் திருப்புர் மாநகராட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடத்திற்கு 24 மணி நேரத்திற்குள் சீல் வைக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து திருப்பூர் மூன்றாவது மண்டல உதவி ஆணையர் சபியுல்லா குமரன் சாலையில் உள்ள சிவா டெக்ஸ்டைல்ஸ் கட்டிடத்திற்கு சீல் வைத்தார்.

விதிமுறைகளை மீறி குமரன் சாலை மற்றும் புது மார்க்கெட் வீதியில் பல கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ள நிலையில், ஒரு கட்டிடத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ள சம்பவம் அனைத்து கட்டிடங்களுக்கும் தொடரும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.
