திருப்பூர் சிவா டெக்ஸ்டைல்ஸ் கட்டிடத்திற்கு சீல்: விதிமுறைகளை மீறியதால் நீதிமன்றம் நடவடிக்கை

விதிமுறைகளை மீறி கட்டிடம் கட்டப்பட்டதாகக் கூறி திருப்பூர் சிவா டெக்ஸ்டைல்ஸ் கட்டிடத்திற்கு சீல் வைத்து நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

திருப்பூர்: விதிமுறைகளை மீறி கட்டிடம் கட்டப்பட்டதாகக் கூறி திருப்பூர் சிவா டெக்ஸ்டைல்ஸ் கட்டிடத்திற்கு சீல் வைத்து நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

திருப்பூர் குமரன் சாலையில் இயங்கி வரும் சிவா டெக்ஸ்டைல்ஸ் கட்டிடமானது விதி முறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகவும், அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகவும் திருப்புர் மாநகராட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.



இந்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடத்திற்கு 24 மணி நேரத்திற்குள் சீல் வைக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து திருப்பூர் மூன்றாவது மண்டல உதவி ஆணையர் சபியுல்லா குமரன் சாலையில் உள்ள சிவா டெக்ஸ்டைல்ஸ் கட்டிடத்திற்கு சீல் வைத்தார்.



விதிமுறைகளை மீறி குமரன் சாலை மற்றும் புது மார்க்கெட் வீதியில் பல கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ள நிலையில், ஒரு கட்டிடத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ள சம்பவம் அனைத்து கட்டிடங்களுக்கும் தொடரும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...