சொத்து, வழிதடப் பிரச்சனை காரணமாக கணவன், மனைவியை கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி திருப்பூர் இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருப்பூர்: சொத்து, வழிதடப் பிரச்சனை காரணமாக கணவன், மனைவியை கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி திருப்பூர் இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
நல்லூர் கிராமம் மானூர் ரெட்டியார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி, வள்ளியம்மாள் தம்பதியினர். இவர்களது தோட்டத்தின் அருகில் ரகுவரன் மற்றும் மகேஸ்வரன் என்பவர்களுக்குச் சொந்தமான நிலம் உள்ளது.
இந்நிலையில், கடந்த 2010-ம் ஆண்டு இருதரப்பினரிடையே சொத்து சம்பந்தமாகவும், வழித்தடம் பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது. இதில் ராகுவரனும், மகேஸ்வரனும் சேர்ந்து பழனிச்சாமி, வள்ளியம்மாள் தம்பதியினரை கடுமையாக தாக்கி கொலை செய்தனர். இது குறித்து, திருப்பூர் ஊரக போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலை செய்த இருவரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து, வழக்கு விசாரணையில் இருக்கும் பொழுதே குற்றம் நிரூபிக்கப்படும் என்பதை அறிந்த மகேஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும், ஜாமீனில் வெளியே வந்த ரகுவரன் வழக்கில் ஆஜராகாமல் 2015-ம் ஆண்டு வரை தலைமறைவாக இருந்தார். தலைமறைவாக இருந்து வரும் குற்றவாளியை பிடித்து ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி கூறியதை தொடர்ந்து ரகுவரன் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, மீண்டும் ஜாமினில் வெளிவந்த ரகுவரனுக்கு நேற்று திருப்பூர் இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, ரகுவரனுக்கு 15 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.6 ஆயிரம் அபராதமும் வழங்கப்பட்டது.
