உதகையில் சாலையோர பூங்காக்கள் பார்க்கிங் தளமாக மாறுமா?

உதகையில் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ள சாலையோர பூங்காக்களை பார்க்கிங் தளமாக மாற்றி போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி: உதகையில் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ள சாலையோர பூங்காக்களை பார்க்கிங் தளமாக மாற்றி போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுற்றுலா நகரம் என்றழைக்கப்படும் உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம், படகு இல்லம், தேயிலை பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. அவற்றைக் காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது போல், உதகை நகரில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. நகரில் போதிய பார்க்கிங் வசதி இல்லாததே இதற்குக் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், நகரை அழகு படுத்தும் விதமாக 5 இடங்களில் சாலையோர பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய பேருந்து நிலையம் அருகேயும், போஸ் திடல் அருகேயும் பூங்கா அமைக்க சுமார் ரூ. 2.5 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.



ஆனால், போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் இந்த பூங்காக்கள் புதர் செடிகள் முளைத்தும், நாற்காலிகள் சேதமடைந்தும் காணப்படுகின்றன. இந்த 5 பூங்காக்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி மறுத்து பூட்டியே காணப்படுகிறது.



தற்போது போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவிக்கும் உதகை நகரில் போதிய பார்க்கிங் வசதி இல்லாமல் உள்ள நிலையில், பராமரிப்பு இல்லாத சாலையோர பூங்காக்களை அகற்ற வேண்டும் என்றும், மேலும் அவற்றை பார்க்கிங் தளமாக மாற்றினால் பார்க்கிங் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுவதோடு, நகராட்சிக்கும் வருவாய் கிடைக்கும் என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், நகராட்சி நிர்வாகம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்தால் வரும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் பயனடைவார்கள் என்றும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...